யென்னுஞ் சொல், இறுதி இகரம் மெய்யொடுங் கெடும் - தன் இறுதியினின்ற இகரந் தானேறிய மெய்யொடுங் கெடும், ஆவயின் - ஆன டகரம் ஒற்றும் - அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும் என்றவாறு. |
உதாரணம் :நாடுரி என வரும். இதனான் யகாரமும் விலக்குண்டது. |
வருமொழி முற்கூறியவதனான் இருநாடுரி முந்நாடுரி எனவும் ஒட்டுக. |
இறுதியிகரமென 1முன்னும் ஓர் இகரம் உள்ளதுபோலக் கூறியவதனான் ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழியாய் நின்று பெயரோடு வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. நாழிக்காயம் உரிக்காயம் சுக்கு தோரை பாளிதம் என வரும். |
(38) |
241. | பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்து மின்னுஞ் சாரியை யாகும். |
|
இஃது இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : பனியென வரூஉங் கால வேற்றுமைக்கு - பனியென்று சொல்லவருகின்ற நோயன்றிக் காலத்தை உணரநின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு, அத்தும் இன்னுஞ் சாரியை ஆகும் - அத்தும் இன்னுஞ் சாரியையாக வரும் என்றவாறு. |
உதாரணம் : பனியத்துக்கொண்டான் பனியிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். |
வேற்றுமை யென்றதனான் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. |
| (39) |
|
1. முன்னும் ஓர் இகரம் இருந்தாற்றான் இறுதி இகரமெனல் வேண்டும். அங்ஙனமின்றாகவும் கூறியதனால் என்பது கருத்து. |