இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலுங் கூறுகின்றது. |
இதன் பொருள் : நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் - நீ யென்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய ஈகார ஈற்றுப் பெயரும், மீயென மரீஇய இடம்வரை கிளவியும் - மீயென்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்தும் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும் - புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் :நீகுறியை சிறியை தீயை பெரியை எனவும், பீகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிற்றுக்குப் பொதுவான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் செவி தலை புறம் இஃது இலக்கணத்தோடு பொருந்திய மருவாதலின் எய்தாத தெய்துவித்தது. |
நீயென்பது அஃறிணை விரவுப்பெயருள் அடங்காதோவெனின் மேல்நின்கையெனத் திரிந்து முடிதலின் அடங்காதாயிற்று. 1மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமையெனினும் இயல்புபற்றி உடன் கூறினார். |
(48) |
251. | இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉ முடனிலை மொழியு முளவென மொழிப. |
| |
இது வல்லெழுத்து மிகுக என்றலின் எய்திய திகந்து படாமற் காத்தது. |
இதன் பொருள் :இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் - இடத்தை வரைந்து உணர்த்தும் மீயென்னுஞ் சொல்லின்முன்னர் இயல்பாய் முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கும் முடியும், உடனிலை மொழியும் உள என மொழிப - தம்மில் ஓசை யியைந்து நிற்றலையுடைய மொழிகளுள் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
|
1. கண்மீ என்பது மீகண் என நிற்றலின் அல்வழியன்று என்றார் உரையாசிரியர். இவர் அதனை மேலிடத்துக்கண் என விரித்தல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. |