உதாரணம் :மீக்கோள் மீப்பல் என வரும். |
உடனிலையென்றதனான் மீங்குழி மீந்தோல் என மெல்லெழுத்துப்பெற்று முடிவனவுங் கொள்க. |
(49) |
252. | வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. |
| |
இஃது ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று - ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஈக்கால் சிறகு தலை புறம், தீக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். |
(50) |
253. | நீயெ னொருபெய ருருபிய னிலையு மாவயின் வல்லெழுத் தியற்கை யாகும். |
|
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வல்லெழுத்து விலக்கி னகரவொற்றே பெறுக என்றலின். |
இதன் பொருள் : நீயென் ஒருபெயர் உருபியல் நிலையும் - நீயென்னும் ஓரெழுத்தொருமொழி உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரம் ஒற்றி நின்றாற்போல ஈண்டுப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் முடியும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்வாறு முடிபுழி இயைபு வல்லெழுத்து மிகா என்றவாறு. |
உதாரணம் :நின்கை செவி தலை புறம் என வரும். |
இஃது ஈகார ஈறு இகர ஈறாய் இகர ஈறு னகர ஈறாய் நின்றுழியும் 'நீயெனொருபெயர்' என்றலிற் 1றிரிந்ததன்றிரிபதுவே யாயிற்று. இயற்கையாகுமெனவே நிலைமொழித் தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று. |
| (51) |
|
1. இது நூன்மரபில் விளக்கப்பட்டுளது. |