உயிர்மயங்கியல்225

254.

உகர விறுதி யகர வியற்றே.
 

இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :உகர இறுதி அகர இயற்று  -  உகர  ஈற்றுப்பெயர்
அல்வழிக்கண்  அகர  ஈற்று  இயல்பிற்றாய்  வல்லெழுத்து வந்துழி  அவ்
வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் :கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும்.
 

(52)
 

255.

சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும்.
 

இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தோடு முடியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :சுட்டின்  முன்னரும்  அத்தொழிற்று ஆகும் - உகர
ஈற்றுச் சுட்டின்  முன்னும் வல்லெழுத்து வந்துழி  அவ் வல்லெழுத்து மிக்கு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் :உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும்.
 

(53)
 

256.

ஏனவை வரினே மேனிலை யியல.
 

இஃது  உகர   ஈற்றுச்  சுட்டு   ஒழிந்த   கணங்களோடு   முடியுமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் :  ஏனவை  வரின்  - உகர  ஈற்றுச்  சுட்டின்  முன்
வல்லெழுத்தல்லாத  மென்கணம் முதலிய மூன்றும்வரின், மேல்நிலை இயல
- அகர   ஈற்றுச்  சுட்டு  முடிந்தாற்போல   ஞநமத்   தோன்றின்  ஒற்று
மிக்கும்   யவ்வரினும்   உயர்வரினும்   வகரம்    ஒற்றியுஞ்   செய்யுளில்
நீண்டு்ம் முடியும் என்றவாறு.
 

உதாரணம் :உஞ்ஞாண்  நூல்  மணி  எனவும்,  உவ்யாழ்  உவ்வட்டு
எனவும், உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினான எனவும் வரும்.
 

(54)
 

257.

சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே.
 

இஃது  இவ்  வீற்றுட்   சிலவற்றிற்கு   வல்லெழுத்து  விலக்கி இயல்பு
கூறுகின்றது.