'பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி' |
(குறுந் - 180) |
எனவும் வருதல் கொள்க. |
(59) |
262. | ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே. |
|
இஃது அவ் வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. |
இதன் பொருள் :ஒடுமரக் கிளவி - ஒடுவென்னும் மரத்தினை உணர நின்ற சொல், உதிமர இயற்று - உதியென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஒடுங்கோடு செதிள் தோல் பூ என வரும். மரமென்றார் ஒடுவென்னும் நோயை நீக்குதற்கு. |
முன்னர் உதிமரத்தின்பின்னர் அம்முப் பெறுகின்ற புளிமரம் வைத்த இயைபான் இதற்கு அம்முப்பேறுங் கொள்க. ஒடுவங்கோடு என வரும். |
(60) |
263. | சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையு மொற்றிடைமிகாஅ வல்லெழுத்தியற்கை. |
|
இது சுட்டுப்பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது. |
இதன் பொருள் :சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொற்கள் பொருட்புணர்ச்சிக்கண்ணும் உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன்சாரியைபெற்று உகரங்கெட்டு முடியும், வல்லெழுத்து இயற்கை ஒற்று இடை மிகாஅ - வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா என்றவாறு. |
உதாரணம் : அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செதிள் தோல் பூ என வரும். ஒற்றிடைமிகா எனவே சாரியை வகுப்ப வல்லெழுத்து வீழாவென்பது பெற்றாம். |
வல்லெழுத்தியற்கை யென்றதனான் உகர ஈற்றுள் எருவுஞ் செருவும் ஒழித்து ஏனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற |