230உயிர்மயங்கியல்

சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை
ஒடுவின்குறை   எழுவின்புறம்   கொழுவின்கூர்மை  என  வரும். இன்னும்
இதனானே உதுக்காண் என்றவழி வல்லெழுத்து மிகுதலுங் கொள்க.
 

(61)
 

264.

ஊகார விறுதி யாகார வியற்றே.
 

இது  நிறுத்த   முறையானே   ஊகார   ஈறு  அல்வழிக்கட்புணருமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் ஊகார   இறுதி   ஆகார   இயற்று  -   ஊகார
ஈற்றுப்பெயர்  அல்வழிக்கண் ஆகார   ஈற்று  அல்வழியின்  இயல்பிற்றாய்
வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : தழூஉக்கடிது  கொண்மூக்கடிது சிறிது  தீது பெரிது  என வரும்.
 

(62)
 

265.

வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கு
நினையுங் காலை யவ்வகை வரையார்.

 

இஃது    இவ்வீற்று    வினையெச்சத்திற்கு    மிக்குமுடியுமென்றலின்,
எய்தாததெய்துவித்ததூஉம்   முன்னிலை வினைக்கு   இயல்பும்   உறழ்பும்
மாற்றுதலின் எய்தியது விலக்கியதூஉம் நுதலிற்று.
 

இதன் பொருள் :  வினையெஞ்சு  கிளவிக்கும்   -   ஊகார   ஈற்று
வினையெச்சமாகிய சொற்கும், முன்னிலை   மொழிக்கும்   -   முன்னிலை
வினைச்சொற்கும்,     நினையுங்காலை    அவ்வகை     வரையார்    -
ஆராயுங்காலத்து அவ்  வல்லெழுத்து  மிக்கு   முடியுங் கூற்றினை நீக்கார்
என்றவாறு.
 

உதாரணம் :உண்ணூக்கொண்டான்  சென்றான்  தந்தான் போயினான்
எனவும், கைதூக்கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் வரும்.
 

நினையுங்காலை  என்றதனான்   இவ்வீற்று   உயர்திணைப்பெயர்க்கும்
அல்வழிக்கண்   வல்லெழுத்துக்    கொடுத்து   முடிக்க.  ஆடூஉக்குறியன்
மகடூஉக்குறியள் என வரும். உயர்திணைப் பெயர்