234உயிர்மயங்கியல்

272.

எகர வொகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய வென்மனார் புலவர்
தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான.

 

இஃது எகர ஒகரம் ஈறாம் இடம் உணர்த்துகின்றது.
 

இதன் பொருள் தேற்றமுஞ்   சிறப்பும்    அல்வழி    ஆன   -
தெளிவுபொருளுஞ்     சிறப்புப்பொருளும்    அல்லாத     வேற்றுமைப்
பொருண்மையிடத்து அளபெடுத்துக்  கூறுதலின்  உளவாகிய, எகர  ஒகரம்
பெயர்க்கு   ஈறாகா  -   எகர   ஒகரங்கள்   பெயர்க்கு  ஈறாய்   வாரா,
வினைக்கு ஈறாய் வரும்,   முன்னிலை   மொழிய   என்மனார்  புலவர் -
அவைதாந்      தன்மையினும்     படர்க்கையினும்வாரா,    முன்னிலைச்
சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

எனவே, தெளிவு பொருளினுஞ்  சிறப்புப் பொருளினும் வந்து பெயர்க்கு
ஈறாம் இடைச்சொல்லாகிய  எகர ஒகரம்  மூன்றிடத்திற்கும் உரியவாமென்று
பொருளாயிற்று.   என   இங்ஙனம்   1அருத்தாபத்தியாற்   கொண்டதற்கு
இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப.
 

உதாரணம் :ஏஎக்கொற்றா  ஓஒக்கொற்றா  சாத்தா தேவா பூதா  என
வரும்.
 

2இவை  எனக்கு ஒரு கருமப்பணி எனவும்,  இங்ஙனஞ் செய்கின்றதனை
ஒழியெனவும்    முன்னிலையேவற்    பொருட்டாய்   வந்தன.    இதற்கு
வல்லெழுத்துப்பெறுமாறு மேலே கூறுப.
 

(70)
 

273.

தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வு
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா.

 

இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாததெய்துவித்தது.
 

இதன் பொருள் :  தேற்ற   எகரமுஞ்  சிறப்பின்  ஒவ்வும்  மேற்கூறு
இயற்கை - முன்னர் அருத்தாபத்தியாற் பெயர்க்


1. அருத்தாபத்தியாற்கொண்டது எ ன்றது,  தேற்றமுஞ் சிறப்புமல்லாவழி,
'எகரவொகரம்பெயர்க்கீறாகா' எனவே தேற்றத்தும் சிறப்பினும் பெயர்க்கீறாய்
வருமென்று கொண்டதை.
 

2. ஏ - பணி, ஓ - ஒழி.