ஈற்று இடைச்சொல்லும், எண்ணும் - எண்ணுப்பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : யானேகொண்டேன் சென்றேன் தந்தேன் போயினேன் என்புழி யான்கொண்டிலேனென மாறுகொண்ட ஒழிபுபட நின்றது. நீயேகொண்டாய் சென்றாய் தந்தாய் போயினாய் எனவும், நிலனே நீரே தீயே வளியே கொற்றனே சாத்தனே எனவும் வரும். |
கூறிய என்றதனாற் பிரிநிலை ஏகாரமும் ஈற்றசை ஏகாரமும் இயல்பாய் முடிதல் கொள்க. அவருள் இவனே கொண்டான் எனவும், 'கழியே, சிறுகுர னெய்தலொடு பாடோ வாதே - கடலே, பாடெழுந்தொலிக்கும்' எனவும் வரும். |
(73) |
276. | வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. |
|
இஃது இவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : வேற்றுமைக்கண்ணும் - ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - ஊகார ஈறு அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :ஏக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும். |
வேக்குடம் வேதலையுடைய குடமென விரியும். |
(74) |
277. | ஏயெ னிறுதிக் கெகரம் வருமே. |
|
இது வல்லெழுத்தினோடு எகரம் விதித்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : ஏயென் இறுதிக்கு எகரம் வரும் - அவ் வேற்றுமைக்கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும் என்றவாறு. |
உதாரணம் : 1ஏஎக்கொட்டில் சாலை துளை புழை எனவரும். |
|
1. ஏ - அம்பு. |