உயிர்மயங்கியல்237

வருமொழி   வரையாது   கூறினமையின்   இயல்புகணத்துக்  கண்ணும்
வருமெனக்   கொள்க.   ஏஎஞெகிழ்ச்சி  நேர்மை  என  வரும். உரையிற்
கோடலால் எகாரம் ஏற்புழிக் கொள்க.
 

(75)
 

278.

சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே.
 

இஃது  அவ்  வீற்றுள் ஒன்றற்கு  வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து
விதித்தது.
 

இதன் பொருள் :சே  என் மரப்பெயர் - பெற்றமன்றிச் சேவென்னும்
மரத்தினை   உணரநின்ற  பெயர்,   ஒடுமா   இயற்று  -  ஒடுமரம்போல
மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : சேங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

(76)
 

279.

பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்.
 

இஃது இயல்பு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது.
 

இதன் பொருள் :  பெற்றம்   ஆயின்   -   முற்கூறிய  சேவென்பது
பெற்றத்தினை  உணர்த்திய   பொழுதாயின், முற்ற   இன்   வேண்டும்  -
முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும் என்றவாறு.
 

உதாரணம் :சேவின்கோடு செவி தலை புறம் என வரும்.
 

முற்ற    என்றதனானே   முற்கூறிய   சேவென்னும்  மரப்பெயர்க்கும்
ஏவென்பதற்கும்   உருபிற்கு   எய்திய   சாரியை  பொருட்கட்  சென்றுழி
இயைபு   வல்லெழுத்து வீழ்தல்   கொள்க. சேவின்கோடு  செதிள்  தோல்
பூ எனவும், ஏவின்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
 

சாரியைப்பேறு  வருமொழி  வரையாது கூறினமையின் இயல்புகணத்தும்
இன்பெறுதல்  கொள்க.  சேவினலம்   மணிவால்,  சேவினிமில் சேவினடை
சேவினாட்டம் என வரும்.
 

இன்னும்   இதனானே   இயல்புகணத்துக்கண்  இன் பெறாது வருதலுங்
கொள்க. செய்யுட்கண்  'தென்றற்கு வீணைக்குச் 1சேமணிக்குக் கோகிலத்திற்
- கன்றிற்கு' என வரும்.
 

(77)

1. சேமணி இன்பெறாது வந்தது.