கெடுத்துத் தூதுணங்காய் வழுதுணங்காய் தில்லங்காய் ஓலம் போழ் தாழங்காய் என முடிக்க. |
284. | பனையின் முன்ன ரட்டுவரு காலை நிலையின் றாகு மையெ னுயிரே யாகாரம் வருத லாவயி னான. |
|
இது நிலைமொழிச் செய்கை நோக்கி எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் :பனையின் முன்னர் அட்டு வருகாலை - முற்கூறியவாறன்றிப் பனையென்னுஞ் சொன்முன்னர் அட்டென்னுஞ்சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையின்று ஆகும் ஐயென் உயிர் - நிற்றலில்லையாகும் ஐயென்னும் உயிர், ஆவயின் ஆன ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம் மெய்ம்மேலேறி முடிக என்றவாறு. |
உதாரணம் : பனாஅட்டு என வரும். இதற்கு மூன்றாவதும் ஆறாவதும் விரியும். |
ஆவயினான என்றதனால் ஓராநயம் விச்சாவாதி என்னும் வேற்றுமை முடிபுங் கேட்டாமூலம் பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங் கொள்க. இவற்றுள் 1வடமொழிகளை மறுத்தலும் ஒன்று. |
(82) |
285. | கொடிமுன் வரினே யையவ ணிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. |
|
இது மேல் ஐகாரங் கெடுத்து அம்முப்பெறுக என்றார், ஈண்டு அது கெடாதுநிற்க என்றலின் எய்தியது இகந்து படாமற் காத்தது. அம்மு விலக்கி வல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்ததுமாம். |
இதன் பொருள் : முன் கொடி வரின் - பனை யென்னுஞ் சொன் முன்னர்க் கொடி யென்னுஞ் சொல் வரின், ஐ அவண் நிற்ப - கேடு ஓதிய ஐகாரம் ஆண்டுக் கெடாது நிற்ப, |
|
1. வடமொழிகள் என்றது, ஓரா, விச்சா, கேட்டா என்பவைகளை. |