உயிர்மயங்கியல்241

வல்லெழுத்து மிகுதி  கடிநிலையின்று - வல்லெழுத்த மிக்கு  முடிதல் நீக்கு
நிலைமையின்று என்றவாறு.
 

உதாரணம் பனைக்கொடி  என   வரும்.  இதற்கு   இரண்டாவதும்
மூன்றாவதும் விரியும்.
 

கடிநிலையின்று    என்றதனான்   ஐகார   ஈற்றுப்  பெயர்களெல்லாம்
எடுத்தோத்தானும்   இலேசானும்   அம்முச்சாரியையும்  பிற   சாரியையும்
பெற்றுழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக் கொள்க.
 

இன்னும்  இதனானே  உருபிற்குச்சென்ற சாரியை  பொருட்கட்சென்றுழி
இயைபு   வல்லெழுத்து    வீழ்க்க.    பனையின்குறை   அரையின்கோடு
ஆவிரையின்கோடு   விசையின்கோடு  ஞெமையின்கோடு  நமையின்கோடு
எனவும்,    தூதுணையின்காய்    வழுதுணையின்காய்    உழையின்கோடு
வழையின்கோடு எனவும்வரும்.
 

பனைத்திரள்  பனைந்திரள் என்னும்  உறழ்ச்சிமுடிபு  தொகைமரபினுட்
புறநடையாற் கொள்க  ;  அல்வழியுமாதலின். அன்றி  ஈண்டு  அவணென்
றதனாற் கொள்வாரும் உளர்.
 

(83)
 

286.

திங்களு நாளு முந்துகிளந் தன்ன.
 

இஃது  இயைபு  வல்லெழுத்தினோடு  இக்குச் சாரியையும் வல்லெழுத்து
விலக்கி  ஆன்சாரியையும்  வகுத்தலின்  எய்தியதன்  மேற்  சிறப்புவிதியும்
எய்தியது விலக்கிப் பிறதுவிதியுங் கூறுகின்றது.
 

இதன் பொருள் : திங்களும்  நாளும்  -  ஐகார   ஈற்றுத்  திங்களை
உணரநின்ற பெயரும் நாளை உணரநின்ற  பெயரும், முந்து  கிளந்தன்ன -
இகர  ஈற்றுத்  திங்களும்  நாளும்போல  இக்கும்  ஆனும் பெற்று முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :   சித்திரைக்குக்கொண்டான்    கேட்டையாற்கொண்டான்
சென்றான்  தந்தான்   போயினான்   என   வரும்.  சித்திரை 1நாளாயின்
ஆன்சாரியை    கொடுக்க.   வல்லெழுத்துக்   கேடுமுன்னர்க்   'கடிநிலை
யின்று' (எழு - 285) என்றதனாற் கொள்க. 


1. நாள் - நட்சத்திரம்.