244உயிர்மயங்கியல்

ஓகாரமும்,    வினாவும்  -  வினாப்பொருண்மையையுடைய    ஓகாரமும்,
ஐயமும்  -  ஐயப்பொருண்மையையுடைய  ஓகாரமும், கூறிய  வல்லெழுத்து
இயற்கையாகும்  -  முற்கூறிய   வல்லெழுத்தின்றி   இயல்பாய்   முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :யானோகொண்டேன் எனவும், நீயோகொண்டாய் எனவும்,
பத்தோ பதினொன்றோ புற்றோ புதலோ எனவும் வரும்.
 

கூறிய என்றதனான் 'யானோ  தேறே  னவர்பொய் வழங்கலரே' (குறு -
21)  எனப்  பிரிநிலையும் நன்றோ  தீதோ  கண்டது  எனத் தெரிநிலையும்
ஓஒகொண்டான்  எனச் சிறப்புங்  'குன்றுறழ்ந்த களிறென்கோ  கொய்யுளை
மாவென்கோ'  என  எண்ணுநிலையும்  வல்லெழுத்து   மிகாது  இயல்பாய்
முடிதல் கொள்க. இதனானே ஈற்றசை வருமேனும் உணர்க.
 

(88)
 

291.

ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே.
 

இதுவும் அது.
 

இதன் பொருள் ஒழிந்ததன்  நிலையும்  மொழிந்தவற்று  இயற்று -
ஒழியசை  ஓகாரத்தினது  நிலையும்  முற்கூறிய ஓகாரங்களின் இயல்பிற்றாய்
இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் :    1கொளலோகொண்டான்         செலலோசென்றான்
தரலோதந்தான் போதலோபோயினான் என ஓசைவேற்றுமையான் ஒருசொல்
தோன்றப் பொருள் தந்து நிற்கும்.
 

(89)
 

292.

வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே
யொகரம் வருத லாவயி னான.

 

இஃது ஓகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் வேற்றுமைக்கண்ணும்  அதனோரற்று - ஓகார ஈற்று
வேற்றுமைக்கண்ணும்   அவ்  வோகார   ஈற்று   அல்வழியோடு   ஒத்து
வல்லெழுத்து மிக்கு முடியும், ஆவயினான ஒகரம் வருதல்  -  அவ்விடத்து
ஒகரம் வருக என்றவாறு.
 

உதாரணம் :ஓஒக்கடுமை  கோஒக்கடுமை  சிறுமை  தீமை   பெருமை
என வரும்.
 

(90)

1.  கொளலோகொண்டான்    -    கொள்ளுதலையோ     செய்தான்.
ஏனையவுமன்ன.