உயிர்மயங்கியல்245

293.

இல்லொடு கிளப்பி னியற்கை யாகும்.
 

இஃது  எய்தியது விலக்கிற்று.  என்னை ?  முன்னர் வன்கணம் வந்துழி
ஒகரம் பெறுகவென  வரைந்த கூறாதும் நிலைமொழித்தொழில் வரையாதுங்
கூறலின் நான்கு கணத்துக் கண்ணுஞ் சேறலின்.
 

இதன் பொருள் :  இல்லொடு   கிளப்பின்  இயற்கையாகும்  - ஓகார
ஈற்றுக்  கோ  வென்னும்   மொழியினை  இல்லென்னும்  வருமொழியோடு
சொல்லின் ஒகரம் மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : 1கோவில்   என   வரும்.   கோவென்றது உயர்திணைப்
பெயரன்றோவெனின்,    கோவந்ததென்று   அஃறிணையாய்    முடிதலின்
அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற்பட்டதென்க.
 

(91)
 

294.

உருபிய னிலையு மொழியுமா ருளவே
யாவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

 

இது  வல்லெழுத்து  விலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் :உருபியல் நிலையும் மொழியுமாருள - ஓகார ஈற்றுச்
சிலபொருட்புணர்ச்சிக்கண்   உருபு  புணர்ச்சியது  இயல்பிலேநின்று  ஒன்
சாரியை  பெற்று  முடியும்  மொழிகளும்  உள,  ஆவயின்  வல்லெழுத்து
இயற்கையாகும்  -  அவ்விடத்து  வல்லெழுத்தின்றி   இயல்பாய்  முடியும்
என்றவாறு.
 

உதாரணம் :கோஒன்கை செவி தலை புறம் என வரும்.
 

2சாரியைப்பேறு   வருமொழி  வல்லெழுத்தை  விலக்காமை இதனானும்
பெற்றாம்.
 

(92)


1. கோ - அரசன். இல் - அரண்மனை. கோ  வந்தது என  அஃறிணை
வினையோடு       முடிதலின்       கோ        என்னுஞ்      சொல்
பொருளாலுயர்திணையாயினும் சொல்லா லஃறிணை யென்றபடி.
 

2. இதன்கண்  வல்லெழுத்து  இயற்கையாகுமென்று  ஆசிரியர் கூறலின்,
சாரியைப்பேறு வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம் என்றார்.