295. | ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்ன ரல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே யவ்விரு வீற்று முகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்தசி னோரே. |
|
இஃது ஒளகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஒளகாரம் இறுதியாகிய பெயர்ச்சொன் முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து மிகுதல் வரைநிலையின்று - வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று, அவ்விரு ஈற்றும் உகரம் வருதல்செவ்விதென்ப சிறந்தசினோர் - அவ்விருகூற்று முடிபின் கண்ணும் நிலைமொழிக்கண் உகரம் வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர் என்றவாறு. |
உதாரணம் :கௌவுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். |
செவ்விதென்றதனான் மென்கணத்தும் இடைக்கணத்தும் உகரம்பெறுதல் கொள்க. கௌவு ஞெமிர்ந்தது ஞெமிர்ச்சி எனவும், வௌவுவலிது வலிமை எனவும் வரும். |
நிலைமொழி யென்றதனாற் கௌவின்கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. |
இன்னும் இதனானே ஐகாரமும் இகரமும் வேற்றுமைக்கண் 1உருபுதொகையாயுழி இயல்பாதல் கொள்க. |
(93) |
உயிர்மயங்கியல் முற்றிற்று. |
|
1. உருபுதொகையாயுழி - உருபு தொக்கவிடத்து. |