256 புள்ளிமயங்கியல்

இதன் பொருள் :அகர   ஆகாரம்   வரூஉங்    காலை  -   அகர
முதன்மொழியும்  ஆகார முதன்மொழியும்  வருமொழியாய்  வருங்காலத்து,
ஈற்றுமிசை அகரம்  நீடலும் உரித்து  - மகர ஒற்றின்மேல்  நின்ற  அகரம்
நீண்டு முடிதலும் உரித்து நீடாமையும் உரித்து என்றவாறு.
 

உதாரணம் :மரம்  குளம் என  நிறுத்தி மகரங்கெடுத்து அடி ஆம்பல்
எனத் தந்து  ரகர  ளகரங்களில்  நின்ற  அகரம்  ஆகாரமாக்கி  மராஅடி
குளாஅம்பல் என முடிக்க.
 

மேற் 'செல்வழி  யறிதல்  வழக்கத்   தான'  (எழு - 312)  என்பதனாற்
குளாஅம்பல் என்புழி ஆகாரத்தை அகரமாக்குக.
 

உம்மையான் மரவடி குளவாம்பல் என நீடாமையுங் கொள்க.
 

வருமொழி முற்கூறியவதனான் இவ் வீற்றுப் பிறவும்  வேறுபட முடிவன
கொள்க.   கோணாகோணம்   கோணாவட்டம்   என  வரும். இவற்றிற்கு
உள்ளென்னும் உருபு விரிக்க.
 

கோணாகோணத்திற்கு   வல்லெழுத்துக்கேடு    1மேலைச்   சூத்திரத்து
இலேசாற் கொள்க.
 

(19)
 

312.

மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே
செல்வழி யறிதல் வழக்கத் தான.

  

இது  மகரங்கெட்டு வல்லெழுத்து  மிகுதலோடு மெல்லெழுத்தும் உறழ்க
என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் :மெல்லெழுத்து  உறழும்   மொழியுமாருள  -  மகர
ஈற்றுள்  வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப்  பெற்று  உறழ்ந்து  முடியும்
மொழிகளும்     உள,     வழக்கத்து      ஆன   செல்வழி  அறிதல் -
வழக்கத்தின்கண்ணும் வழங்கும் இடம் அறிக என்றவாறு.
 

உதாரணம் :குளங்கரை  குளக்கரை  சேறு  தாது  பூமி  என வரும்.
இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன


1. மேல்  என்றது,  வருஞ்சூத்திரத்தை. இலேசு  என்றது,  வழக்கத்தான
என்பதை.