ஒத்த உறழ்ச்சியாய் வழங்கா வென்றற்குச் செல்வழி யறிதலென்றார். |
வழக்கத்தான என்றதனான் குளத்துக்கொண்டான் ஈழத்துச்சென்றான் குடத்துவாய் பிலத்துவாய் என்றாற்போல்வன மகரங்கெட்டு அத்துப் பெற்றன. இவை 'அத்தே வற்றே' (எழு - 133) என்பதனான 1ஒற்றுக்கெடாதாயிற்று, அஃது அல்வழிக்குக் கூறுதலின். மழகளிறு என்பது 'மழவுங் குழவு மிளமைப் பொருள' என்ற உரிச்சொல். அது மகர ஈறன்று. சண்பகங்கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது. |
இன்னும் இதனானே மகரங்கெடாது நிற்பனவுங் கொள்க. 'புலம்புக் கனனே' (புறம் - 258) 'கலம்பெறு கண்ணுளரொக்கற் றலைவ' (மலைபடு - 50) என வரும் |
(17) |
313. | இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. |
|
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. |
இதன் பொருள் :இல்ல மரப்பெயர் - புக்கு உறையும் இல்லன்றி இல்லமென்னும் மரத்தினை உணரநின்ற சொல், விசைமர இயற்று - விசையென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
உதாரணம் :இல்லங்கோடு செதிள் தோல் பூ என வரும். |
மேலைச் சூத்திரத்து 'வழக்கத் தான' (எழு - 312) என்றதனான் மகரக்கேடு கொள்க. |
(18) |
314. | அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். |
|
இது மகரம் அல்வழிக்கண் திரிக என முற்கூறாமையின் எய்தாத தெய்துவித்தது. |
|
1. ஒற்றென்றது, நிலைமொழி மகரத்தை. |