315. | அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே யாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான. |
|
இது மகர ஈற்று அல்வழிக்கண் இம் மொழி இம் முடிபு எய்துக என்றலின் எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : அகம் என் கிளவிக்குக் கைமுன் வரின் - அகமென்னுஞ் சொல்லிற்குக் கையென்னுஞ்சொல் முன்னே வருமாயின், முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன்னின்ற அகரங்கெடாதுநிற்ப அதன் முன்னின்ற ககரமும் மகர வொற்றுங் கெட்டு முடிதலுங் கெடாதுநின்று முடிதலும், வரை நிலை இன்றே யாசிரி யர்க்க - நீக்கு நிலைமையின்று ஆசிரியர்க்கு, ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்குமுடியும் என்றவாறு. |
உதாரணம் :அங்கை என வரும். அகங்கை எனக் கெடாது முடிந்தவழி 1'அல்வழியெல்லாம்' (எழு - 314) என்றதனான் மகரந் திரிந்து முடிதல் கொள்க. இது பண்புத்தொகை. 2அதிகாரத்தானும் பொருணோக்கானும் வேற்றுமைத்தொகை யன்மை உணர்க. |
(20) |
316. | இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. |
|
இஃது இலமென்பது முற்றுவினைச் சொல்லாகாது குறிப்பாகிய உரிச்சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் :இலம் என் கிளவிக்கு - இல்லாமையென்னும் குறிப்பாகிய உரிச்சொற்கு, படு வருகாலை - உண்டாத |
|
1. 'அல்வழியெல்லாம்' என்றது இதற்கு முதற் சூத்திரத்தை. |
2. அதிகாரத்தானும் என்றது அல்வழி அதிகாரப்பட்டு நின்றமையை. பொருள் என்றது உள்ளங்கையெனப் பொருள் தருதலை. |