புள்ளிமயங்கியல்263

320.

படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயருந்
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயி னுருபிய னிலையு
மெல்லெழுத்து மிகுத லாவயி னான.

  

இஃது    உணர்திணைப்பெயரும்    விரவுப்பெயரும்     உருபியலுள்
முடிந்தவாறே  ஈண்டுப்  பொருட்புணர்ச்சிக்கண்ணும்  முடிகவென  எய்தாத
தெய்துவித்தது.
 

இதன் பொருள் :படர்க்கைப்பெயரும்    முன்னிலைப்பெயரும்     -
எல்லாருமென்னும்        படர்க்கைப்பெயரும்         எல்லீருமென்னும்
முன்னிலைப்பெயரும்,    தொடக்கங்   குறுகும்  பெயர்நிலைக்கிளவியும் -
கிளைத்தொடர்ச்சிப்   பொருளவாய்     நெடுமுதல்   குறுகிமுடியுந்  தாம்
நாம் யாமென்னும்     பெயராகிய    நிலைமையையுடைய     சொல்லும்,
வேற்றுமையாயின்   உருபியல்    நிலையும்   -   வேற்றுமைப்  பொருட்
புணர்ச்சிக்கண்ணாயின்    உருபு புணர்ச்சிக்குக் கூறிய   இயல்பின்கண்ணே
நின்று முடியும், ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - மேல் நெடுமுதல்
குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

எல்லாருமென்பதனை  மகரஒற்றும் உகரமுங்  கெடுத்து ரகரப்புள்ளியை
நிறுத்திக்  கை  செவி   தலை  புறம்   எனத்  தந்து இடையிலே தம்முச்
சாரியையும்  இறுதியிலே உம்முச் சாரியையுங் கொடுத்து எல்லார்தங்கையும்
செவியும்  தலையும்  புறமும்  என முடிக்க. இதற்கு 'அம்மி னிறுதி' (எழு -
129) என்னுஞ் சூத்திரத்துள்  'தன்மெய்' என்றதனாற் பிறசாரியைக்கண் மகர
ஒற்றுத்திரிந்து    'ஙஞநவாகும்' எனச்   செய்கைசெய்து   முடிக்க. எல்லீரு
மென்பதற்கு இடையிலே நும்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையுங்
கொடுத்து    முற்கூறிய   செய்கைகளெல்லாஞ்  செய்து எல்லீர்நுங்கையும்
செவியும் தலையும் புறமும் என முடிக்க. தாம்  நாம் என்பனவற்றை 'ஏனை
யிரண்டு நெடுமுதல்  குறுகும்'  (எழு - 188) எனக்  குறுக்கி,  'மகர விறுதி'
(எழு - 310) என்பதனான்  மகரங் கெடுத்துத் தங்கை நங்கை  செவி தலை
புறம் என முடிக்க. யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகர ஒற்றைக்
கெடுத்து 'மகர  விறுதி'  (எழு - 310)  என்றதனால் மகரங்கெடுத்து எங்கை
செவி தலை