புள்ளிமயங்கியல்267

இதன் பொருள் : மெல்லெழுத்து   மிகினும்  மான  மில்லை - அவ்
வெல்லாமென்பது     அல்வழிக்கண்     மேல்    இலேசினாற்    கூறிய
வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து    மிக்கு   முடியினுங்   குற்றமில்லை
என்றவாறு.
 

எனவே, வல்லெழுத்து  மிகுதலே  பெரும்பான்மையாயிற்று.  முற்கூறிய
செய்கைமேலே இது கூறினமையின் மகரக்கேடும் உம்முப்பேறுங் கொள்க.
 

எல்லாங்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும்.
 

மானமில்லை என்றதனான் உயர்திணைக்கண் வன்கணத்து மகரங்கெட்டு
வல்லெழுத்துமிக்கு இறுதி  உம்முப்பெற்று முடிதலும்  இயல்புக்கணத்துக்கண்
மகரங்கெட்டு  உம்முப்பெற்று   முடிதலுங்   கொள்க.  எல்லாக்கொல்லரும்
சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும்  குறியரும்  சிறியரும் தீயரும் பெரியரும்
எனவும், எல்லாஞான்றாரும் நாய்கரும் மணியகாரரும்  வணிகரும் அரசரும்
எனவும் வரும்.
 

இன்னும்  இதனானே உயர்திணைக்கண்  எல்லாங்  குறியரும் சிறியரும்
தீயரும்  பெரியரும்   என      மகரங்கெட்டு      மெல்லெழுத்து மிக்கு
உம்முப்பெறுதலும் எல்லாங்குறியர்  சிறியர் தீயர் பெரியர் எனவும், 1குறியீர்
குறியம் எனவும் உம்முப் பெறாது வருதலுங் கொள்க.
 

இன்னும் இதனானே  இடைக்கணத்தும்  உயிர்க்கணத்தும் மகரங்கெடாது
உம்மின்றி  வருதலுங்   கொள்க.   எல்லாம்வந்தேம்   அடைந்தேம்  என
வரும்.
 

(28)
 

324.

உயர்திணை யாயி னுருபிய னிலையும்.
 

இஃது எல்லாமென்பதற்கு உயர்திணைமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் :உயர்திணை    யாயின்   உருபியல்   நிலையும்  -
எல்லாமென்பது உயர்திணையாய் நிற்குமாயின் உருபு


1. குறியீர், குறியம்  என்பவற்றை, எல்லாங் குறியீர்,  எல்லாங்  குறியம்
என ஒட்டுக. குறியீர் என்பது முன்னிலையைக்  காட்டவும், குறியம் என்பது
தன்மையைக் காட்டவும் வந்த வருமொழிகள்.