268 புள்ளிமயங்கியல்

புணர்ச்சியின்  இயல்பிற்றாய்  இடைக்கண்  நம்மும்  இறுதிக்கண்  உம்மும்
பெற்று முடியும் என்றவாறு.
 

உருபியலுள் 'எல்லா   மென்னு  மிறுதி முன்னர்  - வற்றென் சாரியை'
(எழு - 189) வகுத்ததனான் வற்றின்மிசை   யொற்றென்று   மகரங்கெடுத்த
அதிகாரத்தான் 'உயர்திணையாயி   னம்மிடை   வரும்' (எழு  - 190) என
நம்மின்  முன்னும்  மகரங்கெடுத்தார், அதனோடு ஈண்டு  மாட்டெறிதலின்
அது  கொண்டு ஈண்டும்  மகரங்கெடுக்க. 'அம்மி  னிறுதி'  (எழு  -  129)
என்புழித்  'தன்மெய்'  என்றதனான்   நம்முச்சாரியையினது  மகரந்திரிதல்
கொள்க.
 

எல்லா நங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக.
 

வருமொழி  வரையாது  கூறலின்  எல்லாநஞ்ஞாற்சியும்  நீட்சியும் என
ஏற்பனவற்றோடு முடிபு அறிந்து ஒட்டுக.
 

(29)
 

325.

நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே.

 

இது மகர ஈற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.
 

இதன் பொருள் : நும்மென்    ஒருபெயர்  மெல்லெழுத்து   மிகும் -
நும்மென்று    சொல்லப்படுகின்ற   விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக்கண்
மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு.
 

நுங்கை செவி தலை புறம்  என வரும். 'மகர  விறுதி'  (எழு  -  310)
என்பதனான் மகரங் கெடுக்க.
 

ஒன்றென  முடித்த லென்பதனான்  உங்கை என வருவதூஉங் கொள்க.
'துவர' (எழு - 310) என்றதனான் ஞகர நகரங்கள் வந்துழி மகரங்கெடுதலும்
ஒருபெயர் என்றதனான் ஒற்று  மிகுதலுங்  கொள்க. நுஞ்ஞாண் நூல்  என
வரும். இன்னும் ஒருபெயர்  என்றதனான் நும்மணி யாழ் வட்டு அடை என
மகரங்கெடாமையும் கொள்க.
 

(30)