பீரத் தலர்சிலர் கொண்டே' (குறு - 98) எனப் பீர் அத்துப் பெறுதலுங் கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர். |
இன்னும் இதனானே கூர்ங்கதிர்வேல் ஈர்ங்கோதை என்றாற்போலவுங் குதிர்ங்கோடு விலர்ங்கோடு அயிர்ங்கோடு துவர்ங்கோடு சிலிர்ங்கோடு என்றாற்போலவும் மெல்லெழுத்து மிகுவன கொள்க. |
இன்னும் இதனானே துவரங்கோடு என அம்முப்பெறுதலுங் கொள்க. |
(68) |
364. | சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். |
|
இஃது எய்திய தன்மேற் சிறப்புவிதி வகுத்தது. |
இதன் பொருள் : சார் என் கிளவி காழ் வயின் வலிக்கும் - சாரென்பது காழென்பதனோடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும் என்றவாறு. |
உதாரணம் : சார்க்காழ் என வரும். சாரினது வித்தென்பதே பொருள். 1இதனை வயிரமெனிற் கிளந்தோதுவாரென்று உணர்க. |
(69) |
365. | பீரென் கிளவி யம்மொடுஞ் சிவணும். |
|
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. |
இதன் பொருள் : பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவணும் - பீரென்னுஞ்சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முப் பெற்றும் முடியும் என்றவாறு. |
உதாரணம் : பீரங்கொடி செதிள் தோல் பூ எனவும், 'பொன்போற்பீரமொடு பூத்த புதன்மலர்' (நெடுநல்வாடை - 14) எனவும் வரும். உம்மை இறந்ததுதழீஇயிற்று. |
(70) |
366. | லகார விறுதி னகார வியற்றே. |
|
இது முறையானே லகார ஈற்றை வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கட் புணர்க்கின்றது. |
|
1. இதனை என்றது காழை. |