இதன் பொருள் : லகார இறுதி னகார இயற்று - லகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்துழி னகார ஈற்று இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு. |
உதாரணம் : கற்குறை சிறை தலை புறம் நெற்கதிர் சோறு தலை புறம் என வரும். |
(71) |
367. | மெல்லெழுத் தியையி னகார மாகும். |
|
இது னகாரமாமென்றலின் அவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : மெல்லெழுத்து இயையின் னகாரமாகும் - அவ் வீறு மென்கணம் வந்து இயையின் னகாரமாகத் திரிந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : கன்ஞெரி நுனி முரி என வரும். |
இச்சூத்திரத்தினை வேற்றுமை யிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கட் சிங்கநோக்காக வைத்தமையான் அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். |
(72) |
368. | அல்வழி யெல்லா முறழென மொழிப. |
|
இஃது அவ் வீற்று அல்வழிமுடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : அல்வழியெல்லாம் உறழென மொழிப - இவ் வீற்று அல்வழிகளெல்லாந் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்துமுடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : கல்குறிது கற்குறிது சிறிது தீது பெரிது என வரும். |
எல்லாமென்றதனாற் கல்குறுமை கற்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் உறழ்ச்சி கொள்க. |
இன்னும் இதனானே வினைச்சொல்லீறு திரிந்தனவும் உருபுதிரிந்தனவுங் கொள்க. வந்தானாற்கொற்றன் பொருவானாற் |