292 புள்ளிமயங்கியல்

போகான்    எனவும்.     1அத்தாற்கொண்டான்      இத்தாற்கொண்டான்
உத்தாற்கொண்டான் எத்தாற்கொண்டான் எனவும் வரும்.
 

2அக்காற்கொண்டான் என்றாற்போலப் பிறவும் முடிபு உள்ளனவெல்லாம்
இதனான் முடித்துக்கொள்க. 
 

(73)
 

369.

தகரம் வருவழி யாய்த நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே. 

 

இது  லகரம்  றகரமாய்த்  திரிதலேயன்றி ஆய்தமாகத் திரியுமென்றலின்
எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

இதன் பொருள் : தகரம்  வருவழி  ஆய்தம்  நிலையலும்  -  தகரம்
முதலாகிய மொழி வந்தால் லகரம் றகரமாய்த்  திரிதலேயன்றி ஆய்தமாகத்
திரிந்துநிற்றலும்,  புகர்  இன்று என்மனார் புலமையோர் - குற்றமின்றென்று
சொல்லுவார் ஆசிரியர் என்றவாறு.
 

உதாரணம் : கஃறீது கற்றீது என வரும்.
 

புகரின்றென்றதனால் 'நெடியத னிறுதி' (எழு - 370) என்பதனுள் வேறீது
வேற்றீது என்னும் உறழ்ச்சி முடிபுங் கொள்க. 
 

(74)
 

370.

நெடியத னிறுதி யியல்புமா ருளவே.
 

இஃது  'அல்வழி  யெல்லா  முறழ்'  (எழு - 368)  என்றதனை விலக்கி
இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள் : நெடியதன் இறுதி இயல்புமாருள - நெட்டெழுத்தின்
ஈற்று  லகார  ஈறு  குறியதன்  இறுதிக்கண்  நின்ற லகாரம்போலத் திரிந்து
உறழ்தலேயன்றி இயல்பாய் முடிவனவும் உள என்றவாறு.


1. அதனால் என்பது அத்தால் என நின்றதுபோலும். ஏனையவுமன்ன.
 

2. அக்கால் - அப்பொழுது. இவற்றின் ஈறுகள் திரியும் என்றபடி.