294 புள்ளிமயங்கியல்

வந்து  முடிதலுமாகிய  இந் நான்கு முடிபும், கொளத்தகு மரபின் - சொற்கு
முடிபாகக்  கொளத்தகும்  முறையானே,  ஆகிடனுடைத்து  - தன்முடிபாம்
இடன் உடைத்து என்றவாறு.
 

கொளத்தகு  மரபினென்றதனான்  வல்லெழுத்து  முதன்மொழி  வந்துழி
ஐகாரம் வருதலும், ஐகாரம்  வந்துழி வல்லெழுத்து மிகுதலும்  மிகாமையும்,
ஆகாரம் வந்துழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க.
 

உதாரணம் : இல்லென   நிறுத்திக்   கொற்றன்,   சாத்தன்,  தெளிவு,
பொருள்  எனத்  தந்து  வல்லெழுத்தும்  ஐகாரமுங்  கொடுத்து  இல்லைக்
கொற்றனென ஏனையவற்றோடும் ஒட்டுக.
 

இன்னும்  அவ்வாறே  நிறுத்தி  ஐகாரமே  கொடுத்து இல்லைகொற்றன்,
சாத்தன், தெளிவு, பொருள் என வல்லெழுத்து மிகாது முடிக்க.
 

இன்னுங் கொளத்தகு மரபினென்றதனான்  ஏனைக் கணத்தின் முன்னும்
ஐகாரமே கொடுத்து இல்லைஞாண் நூல் மணி வானம் ஆடை என ஒட்டுக.
 

இஃது  இல்லென்பதோர் முதனிலை  நின்று வருமொழியோடு இங்ஙனம்
புணர்ந்ததென்பது      உணர்தற்கு       இல்லென்     கிளவியென்றும்
இயற்கையாதலுமென்றுங்      கூறினார்.      இம்முடிபு    வினையியலுள்
விரவுவினைக்கண்  'இன்மை செப்பல்' என்புழி  'இல்லை இல்' (எழு - 222)
என்று உரைகூறியவதனானும், அவனில்லை என்றாற்போல்வன உதாரணமாக
எல்லா ஆசிரியருங் காட்டியவாற்றானும் உணர்க.
 

இதனானே இங்ஙனம்  புணர்த்தசொல்லன்றி இல்லையென ஐகார ஈறாய்
நிற்பதோர் சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும்
இவ்வாறே  புணர்க்கவெனின்  அவை  வருமொழியின்றி  ஒரு  சொல்லாய்
நிற்றலிற் புணர்க்காராயினார்.
 

இனி இயல்பு வருமாறு :-எண்ணில்  குணம்  செய்கை துடி பொருள்
எனவும், பொய்யில் ஞானம் மையில் வாண்முகம் எனவும் வரும்.
 

இனி ஆகாரம் வருமாறு :- இல்லாக்கொற்றன்    சாத்தன்   தேவன்
பொருள் என ஆகாரம் வல்லெழுத்துப்பெற்றன.