புள்ளிமயங்கியல்299

உதாரணம் : அஃகடிய  இஃகடிய  உஃகடிய  சிறிய  தீய  பெரிய என
வரும். இவ்வழக்கு இக்காலத்து அரிது. 
 

(84)
 

380.

மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும்.
 

இஃது எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் : மெல்லெழுத்து   இயையின்   அவ்வெழுத்தாகும் -
அவ்வகர ஈறு மென்கணம்வந்து  இயையுமாயின் அவ்வகரவொற்று அவ்வவ்
மெல்லெழுத்தாய்த் திரிந்துமுடியும் என்றவாறு.
 

உதாரணம் : அஞ்ஞாண்  இஞ்ஞாண்  உஞ்ஞாண்  நூல்  மணி  என
வரும்.
 

(85)
 

381.

ஏனவை புணரி னியல்பென மொழிப.
 

இதுவும் அது, அவ் வீறு ஏனைக் கணங்களோடு புணருமாறு கூறுதலின்.
 

இதன் பொருள் : ஏனவை புணரின் - அச்சுட்டுமுதல்  வகர ஈற்றோடு
இடைக்கணமும்  உயிர்க்கணமும் வந்து புணருமாயின்,  இயல்பென மொழிப
- அவ்வகரந் திரியாது இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : அவ்யாழ்  இவ்யாழ் உவ்யாழ் வட்டு அடை ஆடை என
ஒட்டுக.
 

ஈண்டுக்  கூறியது  நிலைமொழிக்கென்றும்  ஆண்டு  'நின்ற  சொன்மு
னியல்பாகும்' (எழு -144) என்றது வருமொழிக்கென்றும் உணர்க.
 

(86)
 

382.

ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே.
 

இஃது எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் : ஏனைவாரம்  - 'வகரக்  கிளவி  நான்மொழியீற்றது'
(எழு - 81)    என்றதனுள்    ஒழிந்துநின்ற    உரிச்சொல்லாகிய   வகரம்
இருவழியும்,  தொழிற்பெயர்  இயற்று  -  ஞகர   ஈற்றுத்   தொழிற்பெயர்
இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும்