394. | உயிர்முன் வரினு மாயிய றிரியாது. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : உயிர்முன் வரினும் - அவ்வேழென்பதன் முன்னர் அளவுப்பெயரும் எண்ணுப்பெயருமாகிய உயிர் முதன்மொழி வரினும், ஆ இயல் திரியாது - நெடுமுதல் குறுகி உகரம் பெறாது முடியும் இயல்பிற் றிரியாது முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஏழகல் ஏழுழக்கு ஏழொன்று ஏழிரண்டு என வரும். |
(99) |
395. | கீழென் கிளவி யுறழத் தோன்றும். |
|
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் உறழ்ச்சி கூறுகின்றது. |
இதன் பொருள் : கீழ் என் கிளவி உறழத் தோன்றும் - கீழென்னுஞ் சொல் உறழ்ச்சியாய்த் தோன்றி முடியும் என்றவாறு. |
தோன்றுமென்றதனான் நெடுமுதல் குறுகாது வல்லெழுத்துப்பெற்றும் பெறாதும் வருமென்ற இரண்டும் உறழ்ச்சியாய் வருமென்று கொள்க. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க. |
உதாரணம் : கீழ்க்குளம் கீழ்குளம் சேரி தோட்டம் பாடி என வரும். |
(100) |
396. | ளகார விறுதி ணகார வியற்றே. |
|
இது நிறுத்தமுறையானே ளகார ஈற்றுச்சொல் வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : ளகார இறுதி ணகார இயற்று - ளகார ஈற்றுப் பெயர் ணகார ஈற்றின் இயல்பிற்றாய் வன்கணம் வந்துழி டகாரமாய்த் திரிந்துமுடியும் என்றவாறு. |
உதாரணம் : முட்குறை சிறை தலை புறம் என வரும். |
(101) |