குற்றியலுகரப்புணரியல்315

உதாரணம் : நாகுகடிது  வரகுகடிது   நாகுகடுமை  வரகுகடுமை  என
வரும். இவை தம் அரைமாத்திரை பெற்றன. ஏனையவற்றோடும் ஒட்டுக.
 

இனி   இது   'மால்யாறு   போந்த   கால்சுரந்து   பாய்ந்து'   எனத்
தொடர்மொழிக்கண்ணும்    அரைமாத்திரை    பெற்றது    என்னாக்கால்
வஞ்சிச்சீரின்றாமாறு உணர்க. 
 

(3)
 

409.

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே.

 

இது  முன்னின்ற  சூத்திரத்தான்  அரைமாத்திரைபெறும்   என்றதனை
விலக்கி  'இடைப்படிற்   குறுகு    மிடனும்'   (எழு - 37)   என்றதனான்
அரைமாத்திரையினுங்   குறுகுமென்று    ஆண்டு    விதித்தது    ஈண்டு
வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கின்றது.
 

இதன் பொருள் : வல்லொற்றுத்   தொடர்மொழி   -   வல்லொற்றுத்
தொடர்மொழிக்   குற்றுகரம்,   வல்லெழுத்து   வருவழி  -  வல்லெழுத்து
முதன்மொழி  வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும்
உரித்து  -  'இடைப்படிற்  குறுகும்'  (எழு  -  37)  என்பதனாற்   கூறிய
அரைமாத்திரையினுங்  குறுகி  நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து
என்றவாறு.
 

உம்மை எதிர்மறை.
 

உதாரணம் : கொக்குக்கடிது  கொக்குக்கடுமை என அரைமாத்திரையிற்
குறைந்தவாறு    குரங்குகடிதென்பது     முதலியவற்றோடு      படுத்துச்
செவிகருவியாக உணர்க.
 

முன்னின்ற சூத்திரத்து 2உகரநிறையுமென்று பாடம் ஓதி அதற்கு உகரம்
அரைமாத்திரையிற்  1சிறிது   மிக்கு   நிற்குமென்று  பொருள்  கூறி  இச்
சூத்திரத்திற்குப் பழைய  அரைமாத்திரை பெற்று நிற்கு மென்று கூறுவாரும்
உளர். 
 

(4)

1. சிறிது  மிக்கு   நிற்கும்   என்பது,   குற்றியலுகரம்   என்பதனோடு
மாறுபடுமாதலிற் பொருந்தாது.
 

2. சீர்நிலை கோடற்கண் இவ்வாசிரியரும் நிறையுமென்றாளுப.