410. | யகரம் வருவழி யிகரம் குறுகு முகரக் கிளவி துவரத் தோன்றாது. |
|
இது குற்றியலுகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறுகின்றது. |
இதன் பொருள் : யகரம் வருவழி உகரக் கிளவி துவரத்தொன்றாது - யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகரவெழுத்து 1முற்றத்தோன்றாது, இகரங் குறுகும் - ஆண்டு ஓர் இகரம்வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் என்றவாறு. |
உதாரணம் : நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது என வரும். 'துவர' என்றார், ஆறு ஈற்றின்கண்ணும் உகரங் கெடுமென்றற்கு. |
(5) |
411. | ஈரெழுத்துமொழியுமுயிர்த்தொடர்மொழியும் வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. |
|
இது முற்கூறிய ஆறனுள் முன்னர் நின்ற இரண்டற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் - ஈரெழுத் தொருமொழிக் குற்றுகர ஈற்றிற்கும் உயிர்த் தொடர்மொழிக் குற்றுகர ஈற்றிற்கும், வேற்றுமையாயின் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், இனஒற்று இடைமிக - இனமாகிய ஒற்று இடையிலேமிக, வல்லெழுத்த மிகுதி தோற்றம் வேண்டும் - வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
உதாரணம் : யாட்டுக்கால் செவி தலை புறம் எனவும், முயிற்றுக்கால் சினை தலை புறம் எனவும் வரும். கயிற்றுப்புறம் வயிற்றுத்தீ என்பனவுமாம். |
|
1. கெடும் என்பது கருத்து. குறுகும் என்பது இருபொருள்படநின்றது; என்னை ? தோன்றும் எனவும் மாத்திரையிற் குறுகும் எனவும் இருபொருள் தரலின். |