தோற்றம் என்றதனான் ஏனைக்கணத்தும் இம் முடிபு கொள்க. யாட்டு ஞாற்சி நிணம் மணி வால் அதள் எனவும், முயிற்று ஞாற்சி நிணம் முட்டை வலிமை அடை ஆட்டம் எனவும் வரும். |
(6) |
412. | ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே யத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது. |
|
இதன் பொருள் : ஒற்று இடை இனம் மிகா மொழியுமாருள - முற்கூறிய இரண்டனுள் இனவொற்று இடைமிக்கு முடியாத மொழிகளும் உள, வல்லெழுத்து மிகல் அத்திறத்தில்லை - வல்லெழுத்து மிக்குமுடிதல் அக்கூற்றுளில்லை என்றவாறு. |
உதாரணம் : நாகுகால் செவி தலை புறம் எனவும், வரகுகதிர் சினை தாள் பதர் எனவும் வரும். |
அத்திற மென்றதனான் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்றவழி இயல்புவல்லெழுத்து வீழ்க்க. யாட்டின்கால் முயிற்றின்கால் நாகின்கால் வரகின்கதிர் என வரும். |
அத்திறமென்றதனான் ஏனைக்கணத்தும் ஒற்றிடைமிகாமை கொள்க. நாகுஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என ஒட்டுக. |
(7) |
413. | இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரு நடையா யியல வென்மனார் புலவர். |
|
இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் - இடையொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், நடைஆ இயல என்மனார் புலவர் - நடைபெற நடக்குமிடத்து முற்கூறிய அவ் வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. |
உதாரணம் : தெள்குகால் சிறை தலை புறம் எனவும், எஃகு கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
|
(8) |