குற்றியலுகரப்புணரியல்319

வந்த  என்றதனான்  இவ்விரண்டிற்கும்   உருபிற்குச்சென்ற   சாரியை
பொருட்கட்  சென்றவழி  இயைபு  வல்லெழுத்து   வீழ்க்க.  கொக்கின்கால்
குரங்கின்கால் என வரும்.
 

எல்லாமென்றதனாற் பறம்பிற்பாரி குறும்பிற்சான்றார் என மெல்லொற்றுத்
திரியாமையுங் கொள்க.
 

ஒற்றென்ற  மிகுதியான் இயல்புகணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம்
முகம்  விரல்  உகிர்  என  மெல்லொற்றுத்   திரிந்துவருமாறு   கொள்க.
சிலப்பதிகாரமென்பதும் அது.
 

வன்றொடர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல் 'ஞநமயவ' (எழு - 144)
என்பதனான் முடியும். 
 

(9)
 

415.

மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை.
 

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது, அம்மு வகுத்தலின்.
 

இதன் பொருள் : மரப்பெயர்க்  கிளவிக்கு அம்மே சாரியை - குற்றிய
லுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ்சாரியை அம்முச் சாரியை என்றவாறு.
 

உதாரணம் : தேக்கங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
 

கமுகங்காய்  தெங்கங்காய்   சீழ்க்கம்புல்   கம்பம்புல்    பயற்றங்காய்
என்றாற்போலும் புல்லினையும்  மரமென அடக்கி மாறுகொளக் கூறலெனத்
தழீஇக்கொண்ட சிதைவென்பதாம் இச் சூத்திரமென்று உணர்க. 
 

(10)
 

416.

மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே.
 

1இது மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.
 

இதன் பொருள் : மெல்லொற்று   வலியா    மரப்பெயரும்   உள -
மெல்லொற்று   வல்லொற்றாகத்   திரியாது    மெல்லொற்றாய்   முடியும்
மரப்பெயரும் உள என்றவாறு. 


1. இச் சூத்திரம், 414 - ம் சூத்திரத்தால், மென்றொடர்மொழிக்கு எய்திய
விதியை ஒருமருங்கு மறுக்கின்றது.