320குற்றியலுகரப்புணரியல்

உதாரணம் : புன்கங்கோடு செதிள்  தோல் பூ எனவும், குருந்தங்கோடு
செதிள் தோல் பூ எனவும் வரும்.
 

வலியாமரப்பெயருமுள  எனவே  வலிக்கும்  மரப்பெயரும் உளவென்று
கொள்க. வேப்பங்கோடு கடப்பங்காய் ஈச்சங்குலை என வரும்.
 

(11)
 

417.

ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரு
மம்மிடை வரற்கு முரியவை யுளவே
யம்மர பொழுகு மொழிவயி னான.

 

இஃது  ஈரெழுத்  தொருமொழிக்கும்  வன்றொடர் மொழிக்கும் எய்தாத
தெய்துவித்தது, முன்னர் எய்தியதனை விலக்கி அம்மு வகுத்தலின்.
 

இதன் பொருள் : ஈரெழுத்துமொழியும்   வல்லொற்றுத்   தொடரும் -
ஈரெழுத்     தொருமொழிக்    குற்றியலுகரமும்      வன்றொடர்மொழிக்
குற்றியலுகரமும்,   அம்இடை   வரற்கும்    உரியவை   உள   -   முன்
முடித்துப்போந்த  முடிபுகளன்றி  அம்முச்சாரியை  இடையேவந்து முடிதற்கு
உரியனவும்  உள ; யாண்டெனின்,  அம்மரபு  ஒழுகும்  மொழிவயினான -
அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து என்றவாறு.
 

உதாரணம் : ஏறங்கோள்     சூதம்போர்     வட்டம்போர்   புற்றம்
பழஞ்சோறு என வரும்.
 

உம்மை  எதிர்மறையாகலின், அம்முப்பெறாதன நாகுகால் கொக்குக்கால்
என முன்னர்க் காட்டினவேயாம்.
 

அம்மரபொழுகும்   என்றதனால்  1அரசக்கன்னி   முரசக்கடிப்பு   என
அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும்  அரச  வாழ்க்கை முரசவாழ்க்கை என
அக்குக்கொடுத்தும் முடிக்க.
 

இன்னும் அதனானே இருட்டத்துக்கொண்டான் விளக்கத்துக்கொண்டான்
என    அத்தும்   வல்லெழுத்துங்    கொடுத்தும்   மயிலாப்பிற்கொற்றன்
பறம்பிற்பாரி  என  இன் கொடுத்துங் கரியதன்கோடு நெடியதன்கோடு என
அன் கொடுத்தும் முடிக்க. 
 

(12) 

1. அரசக்கன்னி,   முரசக்கடிப்பு   இவற்றில்   அரசு   முரசு  என்பன
குற்றுகரவீறு.