உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுப் புணரும் என்றவாறு. |
உதாரணம் : ஒன்றன்காயம் இரண்டன்காயம் சுக்கு தோரை பயறு என ஒட்டுக. 1ஒன்றனாற்கொண்ட காயமென விரியும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்புகணத்துக்கண்ணுங் கொள்க ஒன்றன்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என வரும். மேலைச் சூத்திரத்து 'நிலை' (எழு - 418) என்றதனான் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. |
(14) |
420. | வண்டும் பெண்டு மின்னொடு சிவணும். |
|
இது மென்றொடர்மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிவு கூறுகின்றது. |
இதன் பொருள் : வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் - வண்டென்னுஞ் சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு. |
உதாரணம் : வண்டின்கால் பெண்டின்கால் என வரும். இதற்கு முற்கூறிய இலேசினான் வல்லெழுத்து வீழ்க்க. |
(15) |
421. | பெண்டென் கிளவிக் கன்னும் வரையார். |
|
இது மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் : பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டென்னுஞ் சொற்கு இன்னேயன்றி அன்சாரியை வருதலையும் நீக்கார் ஆசிரியர் என்றவாறு. |
உதாரணம் : பெண்டன்கை செவி தலை புறம் என வரும். |
(16) |
422. | யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய வாய்த விறுதியு முருபிய னிலையும். |
|
இஃது ஈரெழுத் தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன்றற்குஞ் சுட்டுமுதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றிய லுகரத்திற்கும் வேறு முடிபு கூறுகின்றது. |
|
1. ஒன்று - ஒரு காசு. காயம் - சரக்கு. |