குற்றியலுகரப்புணரியல்323

இதன் பொருள் : யாதுஎன்   இறுதியுஞ்   சுட்டுமுதலாகிய    ஆய்த
இறுதியும்   -  யாதென்னும்  ஈறுஞ்  சுட்டெழுத்து  முதலாகிய   ஆய்தத்
தொடர்மொழிக்   குற்றியலுகர   ஈறும்,  உருபியல்  நிலையும்  -   உருபு
புணர்ச்சியின்   இயல்பின்கண்ணே  நின்று  அன்பெற்றுச்  சுட்டுமுதலிறுதி
ஆய்தங்கெட்டு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : யாதன்கோடு அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செவி
தலை  புறம்  என வரும். ஆய்தங்கெடா  முன்னே அன்னின் அகரத்தைக்
குற்றுகரத்தின்மேல்  ஏற்றுக.  ஆய்தங்   கெட்டால்  அது   முற்றுகரமாய்
நிற்றலின். 
 

(17)
 

423.

முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டு மல்வழி யான.

 

இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகரத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : முன்னுயிர்  வருமிடத்து - சுட்டுமுதலாகிய ஆய்தத்
தொடர்மொழிக் குற்றுகர ஈற்றின் முன்னே  உயிர் முதன்மொழி வருமிடத்து,
ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தவொற்று  முன்போலக் கெடாது
நிலைபெற்று   முடிதலை   விரும்பும்    ஆசிரியன்,     அல்வழியான -
அல்வழிக்கண் என்றவாறு.
 

உதாரணம் : அஃது இஃது  உஃது என நிறுத்தி அடை ஆடை இலை
ஈயம்  உரல் ஊர்தி எழு  ஏணி  ஐயம்  ஒடுக்கம்  ஓக்கம்  ஒளவியம் என
ஒட்டுக.
 

முன்னென்றதனான்   வேற்றுமைக்கண்ணும்    இவ்  விதி    கொள்க.
1அஃதடைவு   அஃதொட்டம்   என  ஒட்டுக. இவற்றிற்கு  இரண்டாமுருபு
விரிக்க.  இன்னும்  இதனானே  ஏனை  இலக்கணம்  முடியுமாறு  அறிந்து
முடிக்க. 
 

(18)
 

424.

ஏனைமுன் வரினே தானிலை யின்றே.
 

இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது. 


1. அஃதடைவு -  அதனை  அடைதல்  என விரியும். அஃதொட்டம் -
அதனை ஒட்டல் என விரியும்.