இதன் பொருள் : ஏனை முன் வரின் - முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கண் மல்லன வருமாயின், தான்நிலையின்று - அவ் வாய்தங் கெட்டு முடியும் என்றவாறு. |
உதாரணம் : அதுகடிது இதுகடிது உதுகடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என ஒட்டுக. |
(19) |
425. | அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ் சொல்லிய பண்பி னியற்கை யாகும். |
|
இஃது ஆறு ஈற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லுமிடத்து, எல்லா மொழியும் - ஆறு ஈற்றுக் குற்றுகரமும், சொல்லிய பண்பின் இயற்கை யாகும் - மேல் ஆசிரியன் கூறிய குணத்தையுடைய இயல்பாய் முடியும் என்றவாறு. |
உதாரணம் : நாகுகடிது வரகுகடிது தெள்குகடிது எஃகுகடிது குரங்குகடிது சிறிது தீது பெரிது என வரும். ஏனைக் கணத்துக்கண் 'நின்ற சொன்மு னியல் பாகும்' (எழு - 144) என்றதனாற் கொள்க. |
எல்லாமொழியும் என்றதனால் வினைச்சொல்லும் வினைக்குறிப்புச்சொல்லும் இயல்பாய் முடிதல் கொள்க. கிடந்தது குதிரை கரிதுகுதிரை என வரும். |
சொல்லிய என்றதனான் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்றுமிக்கு வல்லெழுத்துப்பெற்று முடிதலும் இயல்புகணத்துக்கண் இனவொற்று மிக்கு முடிதலுங் கொள்க. கரட்டுக்காணம் குருட்டுக்கோழி திருட்டுப்புலையன் களிற்றுப்பன்றி வெளிற்றுப்பனை எயிற்றுப்பல் எனவும், வரட்டாடு குருட்டெருது எனவும் வரும். |
பண்பினென்றதனால் மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம்பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும், மெல்லொற்று |