இயற்கை யென்றதனான் மென்றொடர்மொழிக்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாயும், வன்றொடர்மொழிக்குற்றியலுகர ஈற்று வினையெச்சம் மிக்கும் முடிவன கொள்க. இருந்துகொண்டான் ஆண்டுசென்றான் தந்துதீர்ந்தான் வந்து போயினான் எனவும், செத்துக்கிடந்தான் செற்றுச்செய்தான் உய்த்துக்கொண்டான் நட்டுப்போனான் எனவும் வரும். |
(22) |
428. | யாவினா மொழியே யியல்பு மாகும். |
|
இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. வல்லெழுத்து விலக்கி இயல்பாமென்றலின். |
இதன் பொருள் : யாவினா மொழியே இயல்பு மாகும் - அவற்றுள் யாவென்னும் வினாவையுடைய சொல் முற்கூறியவாறன்றி இயல்பாயும் முடியும் என்றவாறு. |
உதாரணம் : யாங்குகொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். இஃது எப்படி யென்னும் வினாப்பொருளை உணர்த்திற்று. உம்மையான் மிக்கு முடிதலே வலியுடைத்து. ஏகாரம் பிரிநிலை. |
(23) |
429. | அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. |
|
இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. |
இதன் பொருள் : அந்நான் மொழியும் - சுட்டுமுதன் மூன்றும் யாமுதன் மொழியுமாகிய அந் நான்கு மொழியும், தம்நிலை திரியா - தம் மெல்லொற்றாய, தன்மை திரிந்து வல்லொற்றாகாது முடியும் என்றவாறு. |
உதாரணம் : முற்காட்டியவே தந்நிலை யென்றதனான் மெல்லொற்றுத் திரியாது வல்லெழுத்து மிக்குமுடிவன பிறவுங் கொள்க. அங்குக்கொண்டான் இங்குக்கொண்டான் உங்குக்கொண்டான் எங்குக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். |