குற்றியலுகரப்புணரியல்327

இனி  முன்னர் யா  மொழியென்னாது  வினாவென்றதனான் ஏழாவதன்
இடப்பொருட்டாகிய    பிறவும்    இயல்பாய்    முடிவனவுங்    கொள்க.
முந்துகொண்டான்       பண்டுகொண்டான்          இன்றுகொண்டான்
அன்றுகொண்டான் என்றுகொண்டான் என வரும்.
 

(24)
 

430.

உண்டென் கிளவி யுண்மை செப்பின்
முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலு
மேனிலை யொற்றே ளகார மாதலு
மாமுறை யிரண்டு முரிமையு முடைத்தே
வல்லெழுத்த வரூஉங் காலை யான.

 

இது   மென்றொடர்மொழியுள்  வினைக்குறிப்பாய்  நின்றதோர்  சொற்
பண்பை உணர்த்துங்கால் வேறு முடிவு பெறுதல் கூறுகின்றது.
 

இதன் பொருள் : உண்டென்     கிளவி    உண்மை    செப்பின் -
உண்டென்னுஞ்சொல்      வினைக்குறிப்பையுணர்த்தாது     ஒருபொருள்
தோன்றுங்கால்  தோன்றி  அது  கெடுந்துணையும்  உண்டாய்   நிற்கின்ற
தன்மையாகிய   பண்பை   உணர்த்தி   நிற்குமாயின்,   முந்தை   இறுதி
மெய்யொடுங்   கெடுதலும் -   முன்னர்நின்ற   குற்றுகரந் தான் ஏறிநின்ற
மெய்யொடுங் கெடுதலும், மேனிலை ஒற்றே ளகார மாதலும் - அதற்கு மேல்
நின்ற ணகார ஒற்று ளகார ஒற்றாதலுமாகிய, ஆமுறை இரண்டும் உரிமையும்
உடைத்து - அம்  முறையினையுடைய  இரண்டு  நிலையும் உரித்து. அஃது
உரித்தன்றி  முன்னர்  நின்ற  நிலையிலே  கேடுந் திரிபும் இன்றி நிற்றலும்
உடைத்து,   வல்லெழுத்து   வரூஉங்  காலை  யான   -   வல்லெழுத்து
முதன்மொழியாய் வருங்காலத்து என்றவாறு.
 

வல்லெழுத்து  அதிகாரத்தால்  வராநிற்ப  வல்லெழுத்து வரூஉங்காலை
என்றதனான்  அவ்விருமுடிபும்  உளது  பண்பையுணர்த்தும்  பகரம் வரும்
மொழிக்கண்ணே யென்பதூஉம்  ஏனைக்  கசதக்களிலும் இயல்புகணத்தினும்
உண்டென   நின்று   வினைக்  குறிப்பாயுஞ்  சிறுபான்மைப்   பண்பாயும்
நிற்குமென்பதூஉங் கொள்க.
 

உதாரணம் : உள்பொருள்   உண்டுபொருள்   என   வரும்.    இது
பொருண்மை சுட்டாது உண்மைத்தன்மைப் பண்பை