ஈண்டு உணர்த்திற்று. இனி உண்டுகாணம் உண்டுசாக்காடு உண்டுதாமரை உண்டுஞானம் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வருவனவெல்லாங் கேடுந் திரிபுமின்றி வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றின் வேறுபாடு வினையியலுள் வினைக்குறிப்பு ஓதும் வழி உணர்க. |
உள்பொருளென்பது பண்புத்தொகை முடிபன்றோவெனின், அஃது ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது போலும். இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழியதென்க. |
(25) |
431. | இருதிசை புணரி னேயிடை வருமே. |
|
இது குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : இருதிசை புணரின் - இரண்டு பெருந்திசையுந் தம்மிற் புணரின், ஏஇடை வரும் - ஏயென்னுஞ் சாரியை இடை நின்று புணரும் என்றவாறு. |
உதாரணம் : தெற்கேவடக்கு கிழக்கேமேற்கு இவை உம்மைத் தொகை. |
(26) |
432. | திரிபுவேறு கிளப்பி னொற்று முகரமுங் கெடுதல் வேண்டு மென்மனார் புலவ ரொற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான. |
|
இது பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்த்தலின் எய்தாத தெய்துவித்தது. |
இதன் பொருள் : திரிபுவேறு கிளப்பின் - அப்பெருந் திசைகளோடு கோணத்திசைகளை வேறாகப் புணர்க்குமிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் - அவ்வுகரம் ஏறிநின்ற ஒற்றும் அவ்வீற்று உகரமுங் கெட்டு முடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புணருங்காலை - அது தெற்கென்னுந் திசையொடு புணருங்காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும் - அத் |