இதன் பொருள் : ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது - முற்கூறிய பத்தன் முன்னர் ஒன்று முதலியனவேயன்றி ஆயிர மென்னுமெண் வந்தாலும் ஈறுகெட்டு இன்பெற்று முடியும் இயல்பில் திரியாது என்றவாறு. |
உதாரணம் : பதினாயிரம் என வரும். |
உம்மை இறந்தது தழீஇயிற்று. |
(30) |
436. | நிறையு மளவும் வரூஉங் காலையுங் குறையா தாகு மின்னென் சாரியை. |
|
இஃது எண்ணுப்பெயரோடு நிறைப்பெயரும் அளவுப்பெயரும் புணர்கின்ற புணர்ச்சி கூறுகின்றது. |
இதன் பொருள் : நிறையும் அளவும் வரூஉங் காலையும் - முற்கூறிய பத்தென்பதன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருங்காலத்தும், இன்னென் சாரியை குறையாதாகும் - அவ் வின்னென்னுஞ் சாரியை குறையாது வந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : பதின்கழஞ்சு தொடி பலம் எனவும், பதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், பதிற்றகல் பதிற்றுழக்கு எனவும் வரும். |
குறையாதாகு மென்றதனாற் பொருட்பெயரும் எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் வந்துழியும் இன் கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து முடிக்க. பதிற்றுவேலி யாண்டு அடுக்கு முழம் எனவும், பதின்றிங்கள் எனவும், பதிற்றுத்தொடி எனவும் வரும். பதிற்றொன்று என்பதுபோல இரண்டுமுதற் பத்தளவும் ஒட்டுக. |
இவ் வீற்றின் னகரம் றகரமாதல் 1'அளவாகு மொழி முதல்' (எழு - 121) என்பதனுள் 'நிலைஇய' என்றதனால் |
|
1. அளவாகும் என்பது அளவுப்பெயருக்கே கூறிய விதியாதலினால் நிறைப்பெயர் முதலியவற்றிற்கு 'நிலைஇய' என்ற இலேசினாற் கொள்ளப்பட்டது. பதிற்று என்பதில் இற்று சாரியை யென்பர் நன்னூலார். |