18சிறப்புப்பாயிரம்

திரிபிலவாகச்செய்தல்     -     மூலபாடம்    முதலாகிய    மூன்றும்
ஒன்றோடொன்று    மாறுபடாமற்    செய்தல்.    விபரீதப்  பொருளின்றி
யெனினுமாம்.  நாடின்    எனவும்   பாடம்.   அதற்கேற்பவும்   பொருள்
உரைத்துக்கொள்க.      பொழிப்புரைத்தல்    இருவகைப்படும்.    ஒன்று
பிண்டமாகக்  கூறல்; ஒன்று  மூலபாடம்  கூறியும் அதற்குப் பதப் பொருள்
உரைத்தும்  அதனை  உதாரணத்தால்  விளக்கியுஞ்  செய்தல்.  அவற்றுட்
பின்னையதே  இச் சூத்திரத்தாற்  கூறிய  இலக்கணம். சிவஞானபோதத்துக்
குரைக்கப்பட்ட  பொழிப்புரையும்  பின்னையதே.  அதனை  அச்  சூத்திர
உரையானறிக.
 

அகலம் :-
 

"தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும்
துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம்
பன்னிய வகல மென்மனார் புலவர்."
 

 

இதன் கருத்து:-தன்னூலிடத்தும்     பிறநூலிடத்துமுள்ள   பொருள்
விகற்பங்களை ஆக்கேபஞ் செய்து அதனாற் புறத்தே தோன்றும்படி அவ்
விகற்பத்தைத் தெரித்துக் காட்டுவது அகல வுரையென்ப ராசிரிய ரென்பது.
 

நுட்பம் :-
 

"ஏதுவி னாங்கவை துடைத்தல் நுட்பம்."

 

இதன் கருத்து:-   அங்ஙன   மாக்கேபித்துத்   தெரித்த    விகற்பப்
பொருளுட்பொருந்தாத பொருளைக் காரணங் காட்டி மறுத்து நீக்கி விடுவது
நுட்பவுரை என்பது.
 

எச்சம் :-
 

"துடைத்துக் கொள்பொரு ளெச்ச மாகும்." 

 

இதன் கருத்து:- அங்ஙனம்  மறுத்து   இதுதான்  பொருத்த  மென்று
கொள்ளப்பட்ட பொரு ளெச்சமாகும் என்பது.
 

புகழ்ந்தமதி - கல்வி தொடங்குதற்கு நல்லதென்று புகழப்பட்ட மாதம்.
 

ஓரை - இலக்கினம்.
 

கொள்வோர் - மாணாக்கர். கற்பிக்கப்படுவோர் - கற்பிக்கப்படத் தகுந்த
மாணாக்கர்.
 

இவர் தன்மை :-
 

நன்னிறம் : எவ்வகைப்பட்ட நிறங்களுந் தன்னிடத்திலே கலத்தற்குரியது.
அதுபோல,  நன்   மாணாக்கனும்   ஆசிரியர்  கூறும்   எவ்வகைப்பட்ட
வுரைகளையுந்  தன்   கருத்தில்   ஏற்றுக்கொள்ளத் தகுந்தவனா யிருப்பன்
என்றபடி. 'பல்லுரையுங் கேட்பான்' என்று பின்னுங் கூறுதல் காண்க.
 

பன்னாடைப்புறமென்றது :  பன்னாடையின்  மேற்புறத்தை.  குஞ்சரம் -
யானை.  யானை  தன்னினத்தோடு  கூடி  அவற்றிற்  கிடையூறு  வாராமற்
காப்பதுபோல, நன்மாணக்கனும் தன்னொடு உடன்