338குற்றியலுகரப்புணரியல்

அது  முன்னர்க்  காட்டினாம். ஆறு 'நெடுமுதல் குறுகும்' (எழு - 440)
என்ற மாட்டேற்றானே ஆறு நெடுமுதல் குறுகி நின்றது.
 

உதாரணம் ; அறுகலம்  சாடி  தூதை  பானை  நாழி  மண்டை வட்டி
எனவும், அறுகழஞ்சு  தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன
மேற்காட்டினாம். ஏழு குற்றுகர ஈறன்மையின் மாட்டேறு ஏலாதாயிற்று.
 

(44)
 

450.

நமவ வென்னு மூன்றொடு சிவணி
யகரம் வரினு மெட்டன்மு னியல்பே.

 

இது  வேண்டாது  கூறி 1வேண்டியது முடிக்கின்றது, 'ஞநம யவ' (எழு -
144) என்னுஞ் சூத்திரத்துட் கூறியவற்றைக் கூறுதலின்.
 

இதன் பொருள் : எட்டன்முன்  -  எட்டென்பதன்  முன்னர்,   நமவ
என்னும்  மூன்றொடு  சிவணி  அகரம்  வரினும்  -  அளவுப்பெயர்களின்
முன்னர்  மென்கணத்து  இரண்டும்  இடைக்கணத்து  ஒன்றுமாகிய   நமவ
என்னும்  மூன்றனோடு  பொருந்தி   உயிர்க்கணத்து   அகரம்   வரினும்,
உம்மையான்  உயிர்க்கணத்து  உகரம்  வரினுங்  கூறாத வல்லெழுத்துக்கள்
வரினும்,  இயல்பு   -   முற்கூறியவாறே  டகாரம்  ணகாரமாய்  வேறோர்
விகாரமின்றி இயல்பாய் முடியும் என்றவாறு.
 

நமவவென்னும் மூன்றும் வந்தாற்போல அகரம்வரினுமென்பது பொருள்.
 

உதாரணம் : எண்ணாழி  மண்டை    வட்டி    எனவும்,  எண்ணகல்
எண்ணுழக்கு எனவும், எண்கலம் சாடி தூதை பானை எனவும் வரும்.
 

ஒன்றென   முடித்தலான்   வன்கணத்து   நிறைப்பெயருங்   கொள்க.
எண்கழஞ்சு தொடி பலம் என வரும்.
 

இவ்  வேண்டா  கூறலான்  எண்ணகலெனக்  குற்றுகர  ஈறாய்க் கேடுந்
திரிவும் பெற்று  உயிர்வருமொழியான  தொடர் மொழிக்கண் ஒற்றிரட்டுதல்
கொள்க. 
 

(45)

1. வேண்டியது உயிர்முதன் மொழிவருதற்கண் ஒற்றிரட்டுதல்.