குற்றியலுகரப்புணரியல்339

451.

ஐந்து மூன்று நமவரு காலை
வந்த தொக்கு மொற்றிய னிலையே.

 

இதுவும் மேல்மாட்டேற்றோடு ஒவ்வாமுடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஐந்தும்  மூன்றும்  நமவரு  காலை  -  ஐந்தென்னு
மெண்ணும்   மூன்றென்னு   மெண்ணும்   நகர   முதன்மொழியும்   மகர
முதன்மொழியும்   வருமொழியாய்   வருங்காலத்து,  ஒற்றியல்   நிலை  -
நிலைமொழிக்கண் நின்ற  ஒற்று நடக்கும் நிலைமை கூறின், வந்தது ஒக்கும்
-  மேற்கூறியவாறே  மகரமும்  பகரமுமாகாது  வருமொழி   முதல்  வந்த
ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஐந்நாழி ஐம்மண்டை முந்நாழி மும்மண்டை என வரும்.
 

மூன்றும்  ஐந்தும்   என்னாத   முறையன்றிக்   கூற்றினால்   நானாழி
நான்மண்டை  என்புழி  நிலைமொழி   னகரம்  றகரமாகாது   நின்றவாறே
நின்று  முடிதலும்  வருமொழி  முதனின்ற   நகரம்   னகரமாகத்   திரிய
நிலைமொழி நகரங் கெடுதலுங் கொள்க. 
 

(46)
 

452.

மூன்ற னொற்றே வகரம் வருவழித்
தோன்றிய வகரத் துருவா கும்மே.

 

இதுவும் அது.
 

இதன் பொருள் : மூன்றனொற்று -  மூன்றாமெண்ணின்கணின்ற  னகர
ஒற்று, வகரம் வருவழி - வகரமுதன்மொழி வருமிடத்து, தோன்றிய வகரத்து
உருவாகும்  -  அவ்  வருமொழியாய்த்  தோன்றிய  வகரத்தின்  வடிவாய்
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : முவ்வட்டி என வரும்.
 

தோன்றிய  என்றதனானே  முதல்  நீண்டு  வகர  ஒற்றின்றி  மூவட்டி
என்றுமாம். 
 

(47)
 

453.

நான்க னொற்றே லகார மாகும்.
 

இதுவும் அது.