குற்றியலுகரப்புணரியல்343

இன்னும்  இதனானே  ஒன்பதினாழியென்புழி  வந்த  இன்னின்  னகரக்
கேடுங்  கொள்க.  'அளவாகு  மொழிமுதல்'  (எழு - 121)  என்பதனானும்
'நிலைஇய' என்னும் இலேசானும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க.
 

(54)
 

460.

நூறுமுன் வரினுங் கூறிய வியல்பே.
 

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்பதனைப் புணர்க்கின்றது.
 

இதன் பொருள் : முன்   -  ஒன்றுமுதல்  ஒன்பான்களின்  முன்னர்,
நூறுவரினும்  -  நூறென்னு  மெண்ணுப்பெயர் வந்தாலும், கூறிய இயல்பு -
மேற்  பத்தென்பதனோடு  புணரும்  வழிக்  கூறிய  இயல்பு எய்தி முடியும்
என்றவாறு.
 

அது குற்றுகரம் மெய்யொடுங்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி
முதலீரெண்ணி  னொற்று  ரகரமாய்  உகரம்  பெற்று  இடைநிலை  ரகரம்
இரண்டன்கட் கெட்டு முடிதலாம்.
 

உதாரணம் : ஒருநூறு இருநூறு அறுநூறு எண்ணூறு என வரும் இவை
மாட்டேற்றான் முடிந்தன. 1மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப.
 

(55)
 

461.

மூன்ற னொற்றே நகார மாகும்.
 

இது மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் : மூன்ற    னொற்றே    நகார     மாகும்     -
மூன்றாமெண்ணின்கணின்ற னகரவொற்று நகரவொற்றாகும் என்றவாறு.
 

உதாரணம் : முந்நூறு என வரும். 
 

(56)
 

462.

நான்கு மைந்து மொற்றுமெய் திரியா.
 

இதுவும் அது. 


1. மாட்டேறு  ஒவ்வாதன  மேற்கூறி  முடிப்ப என்றது, மாட்டேற்றினாற்
பெற்ற  முன்னை  விதிகளுக்குப்  பொருந்தாது வருவனவற்றிற்கு இனி விதி
சொல்லப்படும் என்பதை.