344குற்றியலுகரப்புணரியல்

இதன் பொருள் : நான்கும்    ஐந்தும்    ஒற்று    மெய்திரியா   -
நான்கென்னு    மெண்ணும்     ஐந்தென்னுமெண்ணுந்   தம்மொற்றுக்கள்
நிலைதிரியாது முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நானூறு ஐந்நூறு என வரும்.
 

மெய்யென்றதனான்   நானூறென்புழி  வருமொழி  நகரத்துள்  ஊகாரம்
பிரித்து  'லனவென  வரூஉம்' (எழு - 149) என்பதனான் னகர வொற்றாக்கி
ஊகாரமேற்றி நிலைமொழி னகரங் கெடுத்துக் கொள்க.
 

(57)
 

463.

ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை யொற்றே ளகார மிரட்டு
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊவா வாகு மியற்கைத் தென்ப
வாயிடை வருத லிகார ரகார
மீறுமெய் கெடுத்து மகர மொற்றும்.

 

இதுவும் அது.
 

இதன் பொருள் : ஒன்பான்    முதனிலை   முந்து   கிளந்தற்று   -
ஒன்பதென்னு  மெண்ணின்   முதனின்ற   ஒகரம்  மேற்பத்தென்பதனோடு
புணரும்வழிக்  கூறியவாறுபோல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும்,
முந்தை  ஒற்றே  ளகாரம்  இரட்டும் - அவ்வொகரத்தின் முன்னின்ற னகர
ஒற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், நூறென்கிளவி நகார மெய்கெட ஊ
ஆவாகும் இயற்கைத்தென்ப - வருமொழியாகிய நூறென்னுமெண்ணுப்பெயர்
நகரமாகிய   மெய்கெட   அதன்மேல்   ஏறிய    ஊகாரம்   ஆகாரமாம்
இயல்பையுடைத்தென்பர்   புலவர்,   ஆயிடை   இகர   ரகரம் வருதல் -
அம்மொழியிடை  ஓர்  இகரமும்  ரகாரமும்  வருக,  ஈறு   மெய்கெடுத்து
மகரம்  ஒற்றும் -  ஈறாகிய  குற்றுகரத்தினையும்  அஃது  ஏறிநின்ற  றகர
ஒற்றினையும் கெடுத்து ஓர் மகர ஒற்று வந்து முடியும் என்றவாறு.
 

மெய்யென்பதனான் நிலைமொழிக்கட் பகரங் கெடுக்க.
 

உதாரணம் : தொள்ளாயிரம் என வரும்.