346குற்றியலுகரப்புணரியல்

இதன் பொருள் : மூன்ற  னொற்றே  வகார  மாகும் -  மூன்றென்னு
மெண்ணின்கணின்ற  னகர  ஒற்று   வகர  ஒற்றாகத்   திரிந்து   முடியும்
என்றவாறு.
 

உதாரணம் : முவ்வாயிரம் என வரும்.
 

முன்னிற் சூத்திரத்து நிலை என்றதனான் இதனை முதனிலை நீட்டி வகர
ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் என முடிக்க. 
 

(61)
 

467.

நான்க னொற்றே லகார மாகும்.
 

இது நான்கென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : நான்க  னொற்றே  லகார  மாகும்  -  நான்கென்று
மெண்ணின்கணின்ற  னகர  ஒற்று   லகர   ஒற்றாகத்  திரிந்து   முடியும்
என்றவாறு.
 

உதாரணம் : நாலாயிரம் என வரும். 
 

(62)
 

468.

ஐந்த னொற்றே யகார மாகும்.
 

இஃது ஐந்தென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஐந்த   னொற்றே  யகார  மாகும்  -  ஐந்தென்னு
மெண்ணின்கணின்ற நகர ஒற்று யகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு.
 

ஐயாயிரம் என வரும்.
 

(63)
 

469.

ஆறன் மருங்கிற் குற்றிய லுகர
மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும்.

 

இஃது ஆறென்னு மெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஆறன்  மருங்கிற்  குற்றிய  லுகரம்  -  ஆறென்னு
மெண்ணின்கணின்ற   குற்றியலுகரம்   நெடுமுதல்    குறுகி    அறுவென
முற்றுகரமாய் நிற்றலின், மெய் ஒழிய ஈறு