குற்றியலுகரப்புணரியல்347

கெடுதல் வேண்டும் - அது  தானேறிய  மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது
நிற்ப  முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன்
என்றவாறு.
 

உதாரணம் : அறாயிரம் என வரும்.
 

முன்னர் 'நெடுமுதல் குறுகும்' (எழு - 440) என்றவழி அறுவென நின்ற
முற்றுகரத்திற்கே  ஈண்டுக்  கேடு  கூறினாரென்பது  பெற்றாம்,  என்னை?
குற்றியலுகரமாயின்    ஏறிமுடிதலின்.     இது     குற்றுகரந்     திரிந்து
முற்றுகரமாய்  நிற்றலின்  ஈண்டு  முடிபு  கூறினார்.   முற்றியலுகரம்  ஈறு
மெய்யொழியக்கெடுமெனவே   குற்றுகரங்   கெடாது    ஏறிமுடியுமென்பது
அருத்தாபத்தியாற் பெறுதும். 1ஆறாயிரம் என வரும்.
 

மருங்கென்றதனாற்  பிறபொருட் பெயர்க்கண்ணும்  நெடுமுதல் குறுகாது
நின்று முடிதல் கொள்க. ஆறாகுவதே என வரும். 
 

(64)
 

470.

ஒன்பா னிறுதி யுருவுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.

 

இஃது ஒன்பதென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : ஒன்பான்  இறுதி  -  ஒன்ப  தென்னு  மெண்ணின்
இறுதிக் குற்றுகரம், உருவுநிலை திரியாது - தன்வடிவுநிலை திரிந்து கெடாது,
சாரியை மரபு இன்பெறல் வேண்டும் - சாரியையாகிய மரபினையுடைய இன்
பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
 

உதாரணம் : ஒன்பதினாயிரம் என வரும்.
 

உருவென்றும்  நிலையென்றுஞ்  சாரியை மரபென்றுங் கூறிய மிகையால்
ஆயிரமல்லாத  பிறவெண்ணின்கண்ணும்  பொருட்  பெயரிடத்தும் இன்னும்
உகரமும் வல்லெழுத்தும் பெற்று 


1. ஆறாயிரம்  என்புழி  ஆறு குற்றியலுகரம் ; அருத்தாபத்தி விதியால்
வருமொழியாகிய ஆயிரம் ஏறி முடிந்தது.