குற்றியலுகரப்புணரியல்349

இலேசுகளாற்கொண்ட செய்கைளில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க.
 

ஏற்புழிக்கோட   லென்பதனாற்   1தொள்ளாயிரமென்ற    முடிபினோடு
மாட்டேறு     சென்றதேனும்    அவ்வாறு    முடியாதென்று    கொள்க.
முன்னென்பதனான்  இன்சாரியை  பெற்று  ஒன்பதினூறாயிரம்  என்றுமாம்.
நிலையென்றதனான்  மூன்றும்  ஆறும்   இயல்பாக  முடிவுழி  நெடுமுதல்
குறுகாமை கொள்க. 
 

(66)
 

472.

நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்
கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே.

 

இது நூறென்பதனோடு ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.
 

இதன் பொருள் : நூறு  என்  கிளவி  -  நூறென்னுமெண்ணுப்பெயர்,
ஒன்று  முதல்  ஒன்பாற்கு -  ஒன்றுமுதல் ஒன்பான்களோடு புணருமிடத்து,
ஈறு சினையொழிய - ஈறாகிய குற்றுகரந் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடுங்
கெடாது நிற்ப,  இன ஒற்று  மிகும் -  அச்சினைக்கு இனமாகிய றகர ஒற்று
மிக்கு முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நூற்றொன்று  என   வரும்.   இரண்டு  முதல்  ஒன்பது
அளவுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.
 

2ஈறுசினை என்று ஓதிய  மிகையான்  நூறென்பதனோடு  பிற எண்ணும்
பிறபொருட்பெயரும்  இவ்விதியும்  பிறவிதியும்  எய்தி  முடிதல்  கொள்க.
நூற்றுப்பத்து  நூற்றுக்கோடி  நூற்றுத்தொண்ணூறு  எனவும்,  நூற்றுக்குறை
நூற்றிதழ்த்தாமரை  நூற்றுக்காணம்  நூற்றுக்கான்மண்டபம்  எனவும்  இன
ஒற்று மிக்கனகொள்க. இன்னும் இதனானே இருநூற்றொன்று 


1. நூறனியற்கை என்று  மாட்டியதால்  ஒன்பதனோடு நூறு புணருங்கால்
தொள்ளாயிரம் என  வந்தாற்போல  ஒன்பதன்முன் நூறாயிரம் வருங்காலும்
தொள்ளாயிர ஆயிரம் எனத்திரிந்து முடியுமென்பது பட்டதேனும் அங்ஙனம்
முடியாதென்பது கருத்து.
 

2. ஈறு என்பதே அமையவும் சினையென்றது மிகையென்க.