350குற்றியலுகரப்புணரியல்

இரண்டு நூற்றொன்று என நூறு அடையடுத்தவழியுங் கொள்க. 
 

(67)
 

473.

அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும்.
 

இஃது     அந்நூறென்பதனோடு      ஒன்றுமுதல்      ஒன்பான்கள்
அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் : அவை   ஊர்பத்தினும்  -  அந்நூறென்பது  நின்று
முற்கூறிய  ஒன்றுமுதல் ஒன்பான்களை  ஊர்ந்து  வந்த பத்தென்பதனோடு
புணருமிடத்தும்,  அத்தொழிற்றாகும் - ஈறு சினையொழிய இன ஒற்று மிக்கு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : நூற்றொருபஃது  இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது
அறுபஃது  எழுபஃது  எண்பஃது  என வரும். மற்று நூற்றொன்பது அவை
ஊரப்பட்டு வந்தது அன்மை உணர்க.
 

ஆகுமென்றதனான்   ஒருநூற்றொருபஃது   இருநூற்றொருபஃது   என
நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்க. 
 

(68)
 

474.

அளவு நிறையு மாயிய றிரியாது
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையு
முற்கிளந் தன்ன வென்மனார் புலவர்.

 

இது  நூறென்பதனோடு  அளவுப்பெயரும்  நிறைப்பெயரும் முடியுமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள் : அளவும்    நிறையும்    ஆயியல்    திரியாது  -
நூறென்பதனோடு   அளவுப்பெயரும்    நிறைப்பெயரும்    புணருமிடத்து
முற்கூறிய  இயல்பிற்  றிரியாது  இன  ஒற்று மிக்குமுடியும், குற்றியலுகரமும்
வல்லெழுத்தியற்கையும் - அவ்விடத்துக்  குற்றியலுகரங்  கெடாமையும் இன
ஒற்று மிக்கு  வன்றொடர்மொழியாய்  நிற்றலின்  வருமொழி  வல்லெழுத்து
மிகும்  இயல்பும்,  முற்கிளந்தன்ன  என்மனார்  புலவர்  -  'வல்லொற்றுத்
தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே'