குற்றியலுகரப்புணரியல்351

(எழு - 426)   என   வன்றொடர்மொழிக்குக்    கூறிய    தன்மையவாய்
முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : நூற்றுக்கலம்  சாடி  தூதை பானை நாழி மண்டை வட்டி
அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும்.
 

திரியாதென்றதனால்   நூறென்பது   அடையடுத்த  வழியும்   இவ்விதி
கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் என வரும். 
 

(69)
 

475.

ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
யொன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே
நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும்.

 

இஃது ஒன்றுமுதல் எட்டு  ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும்
ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.
 

இதன் பொருள் : ஒன்று முதலாகிய  பத்து  ஊர்கிளவி - ஒன்றுமுதல்
எட்டு ஈறாகப் பத்தென்னும்  எண்  ஏறி  ஒரு  சொல்லாகி நின்ற ஒருபஃது
முதலிய  எண்கள்,  ஒன்றுமுதல்  ஒன்பாற்கு -  ஒன்றுமுதல்  ஒன்பான்கள்
வருமொழியாய்  வந்து புணரும்இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்
- பஃதென்பதன்கண் நின்ற ஆய்தங்கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன்,
ஒற்று இடைமிகும் - ஆண்டு  இன  ஒற்றாகிய ஒரு தகர ஒற்று இடைமிக்கு
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : ஒருபத்தொன்று     இருபத்தொன்று     ஒருபத்திரண்டு
இருபத்திரண்டு என எல்லாவற்றோடும்  ஒட்டுக. இவற்றுள் 1ஒருபத்தொன்று
ஒருபத்திரண்டு என்னும்  எண்கள் அதிகாரத்தால்  நின்ற நூறென்பதனோடு
அடுத்து வருமென்று உணர்க. 
 

(70)

1. ஒருபத்தொன்று     ஒருபத்திரண்டு       என்னும்       எண்கள்
அதிகாரத்தால்நின்ற        நூறென்பதனோடு       அடுத்துவருமென்றது,
நூற்றொருபத்தொன்று,     நூற்றொருபத்திரண்டு      என      நூறோடு அடுத்துவருதலை.  அதிகாரமென்றது   67 - ம்  சூத்திரம்  முதலாக  நூறு
அதிகாரப்பட்டு வருதலை.