குற்றியலுகரப்புணரியல்359

றிணை   யென்னும்  அவ்   விரண்டிடத்தும்   உளவாகிய,  ஐம்பாலறியும்
பண்புதொகு  மொழியும் - ஒருவன்  ஒருத்தி  பலர்  ஒன்று  பல என்னும்
ஐந்துபாலினையும்  அறிதற்குக்  காரணமாகிய 1பண்புகொள் பெயர் தொகுந்
தொகைச்  சொல்லும்,  செய்யுஞ்  செய்த  என்னுங் கிளவியின் - செய்யுஞ்
செய்த  என்னும்  பெயரெச்சச்  சொற்களினுடைய,  மெய்  ஒருங்கு இயலுந்
தொழில்   தொகுமொழியும்   -   காலங்காட்டும்    உம்மும்   அகரமும்
ஒருசொற்கண்ணே   சேரநடக்கும்   புடைபெயர்ச்சி   தொக்கு    நிற்குஞ்
சொற்களும்,  தம்இயல்  கிளப்பின் - தமது  தன்மை கூறுமிடத்து, தம்முன்
தாம்வரூஉம் எண்ணின் றொகுதி உளப்பட - நிறுத்த சொல்லுங் குறித்துவரு
கிளவியுமாய்  வாராது   தம்முன்னர்த்  தாமே  வந்து  நிற்கும்  எண்ணுப்
பெயரினது  தொகுதியும்  உளப்பட,  அன்ன  பிறவும்  எல்லாம்  -  அத்
தன்மையாகிய பிறவு மெல்லாம், மருவின் பாத்திய - உலகத்து மருவி நடந்த
வழக்கினது  பகுதியைத்  தம் இலக்கணமாகவுடைய, புணரியல் நிலை இடை
யுணரத்  தோன்றா - ஒன்றனோடொன்று  புணருதல் நடந்த தன்மை இடம்
விளங்கத் தோன்றா என்றவாறு.
 

உதாரணம் : கண்  விண்ணவிணைத்தது   விண்விணைத்தது   இவை
குறிப்புரிச்சொல;்  ஆடை  வெள்ள  விளர்த்தது  வெள்விளர்த்தது  இவை
பண்புரிச்சொல் ;  கடல்  ஒல்ல   வொலித்தது   ஒல்லொலித்தது   இவை
இசை யுரிச்சொல்.  'ஒல்லொலிநீர்  பாய்வதே  போலுந் துறைவன்' என்றார்
செய்யுட்கண்ணும். இவை உயிரீறாயும்  புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண்
அடக்கலாகாமையின்   நெறிப்படவாரா  என்றார்.  விண்ண   விணைத்தது
தெறிப்புத்தோன்றத்  தெறித்த  தென்றும்   விண்விணைத்தது   தெறிப்புத்
தெறித்ததென்றும்  ஆம்.  ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம்
நிற்றலிற்  றன்மை குறைந்த  சொல்லாயிற்று. 'வினையே குறிப்பே' (சொல் -
258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற் 


1. பண்புப்பெயர்  -  கருமை.  பண்புகொள்பெயர் -  கரியன்  முதலிய
ஐம்பாற்  சொற்கள். கோட்டுநூறு - சுண்ணாம்பு.  பின்னுள்ளோர் என்றது -
சின்னூலாரையும், நன்னூலாரையும், வீரசோழியகாரரையும் போலும்.