362குற்றியலுகரப்புணரியல்

லோடு திரிந்து முடிவனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
- முன்னர்க்    கூறிய     இலக்கண    முறைமையினின்றும்   வேறுபடத்
தோன்றுமாயின்  அவற்றை,  நன்மதி   நாட்டத்து  -  நல்ல   அறிவினது
ஆராய்ச்சியாலே, வழங்கியன் மருங்கின் - வழக்கு முடிந்து நடக்குமிடத்தே,
உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனார் புலவர் - முடிபு வேறுபாடுகளை அறிந்து
நடாத்துக என்று கூறுவர் புலவர் என்றவாறு.
 

உதாரணம் : 'தடவுத்திரை'  என  உகரமும்  வல்லெழுத்தும் பெற்றுந்
'தடவுநிலை'  (புறம் - 140)  என உகரம்  பெற்றும் அகர ஈற்று உரிச்சொல்
வந்தது.  அதவத்தங்கனி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப்பெற்றது.
1'கசதபத் தோன்றின்' என அகர ஈற்றின் முன்னர்த் தகரங்கொடுக்க.
 

2'நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன்
குரவ நீடிய கொன்றையங் கானல்' 

 

என   ஆகார   இறுதி   குறியதனிறுதிச்   சினைகெட்டுழி    இருவழியும்
அம்முப்பெற்றன.
 

'முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ' 

(மலைபடு - 176)
 

என அவ்வீறு  அல்வழிக்கண்  அம்முப்பெறாத முடிவு பெற்றன. 'திண்வார்
விசித்த  முழவொ  டாகுளி'  (மலைபடு - 3)   'சுறவெறிமீன்'  'இரவழங்கு
சிறுநெறி' (அகம் - 318) இவை உகரம் பெறாமல் வந்தன. 'கள்ளியங் காட்ட
புள்ளியம்  பொறிக்கலை'  (அகம் - 97)  என  இகர ஈறு வேற்றுமைக்கண்
அம்முப்பெற்றன. 'தீயி னன்ன வொண்செங் காந்தள்' (மலைபடு - 145) என
ஈகார  ஈறு   வேற்றுமைக்கண்  இன்பெற்றது.   'நல்லொழுக்கங்   காக்குந்
திருவத்தவர்'   (நாலடி  -  57)   என   உகர    ஈறு   வேற்றுமைக்கண்
அத்துப்பெற்றது. 'ஏப்பெற்றமான்  பிணைபோல' (சிந்தா - 2965) என ஏகார
ஈறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது வந்தது. 'கைத்துண்டாம் 


1. கசதப - அகரவீறு.
 

2. நறா - ஆகாரவீறு; முளா, பிணா, இரா, ஆகாரவீறு.